தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 29 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் "ரியல்" அமைப்பின் சேவைகளைப் பற்றி இங்கு காண்போம்.
"ரியல்" - எனும் "ஊரக கல்வி மற்றும் விடுதலைக்கான அமைப்பானது மக்களின் வாழ்க்கை ஆதாரத்தை முன்னேற்றுவதற்காக கடந்த 29 ஆண்டுகளாக களப்பணி ஆற்றிக் கொன்டிருக்கிறது.இது கல்லூரி மாண்வர்களால் பதிவு செய்யப்பெற்ற ஓர் அமைப்பாகும்.இதன் அடிநாதமாக விளங்குவது விளிம்பு நிலை மக்களின் சமூக- பொருளாதார விடுதலைக்கான கொள்கைகள் ஆகும்.அதனை தன் ஒவ்வொரு செயல்பாட்டிலும் புகுத்திக் கொண்டு தன் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறது "ரியல்". இது உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பாகும்.
|