நீளாதுங்கஸ்தநகிரிதடீ ஸுப்தமுபோத்ய க்ருச்ணம் பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்ஸித்த மத்யாபயந்தீ ஸவோச்சிச்டாயாம் ஸ்யஜினிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே கோதா தஸ்யை நம இதமதம் பூய ஏவாஸ்து பூய: அன்னவயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பலபதியம் - இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமால் சூடிக் கொடுத்தாளைச் சொல்லு சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை பாடியருளவல்ல பல்வளையாய் - நாடி நீ வேங்கடவற்கு என்ன விதியென்றவிம்மாற்றம் நாம்கடவாவண்ணமாநல்கு 1. மார்கழித் திங்கள் பதிநிறைந்த நன்னாளால் நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்குமாய்ப்பாடிச் செல்வச்சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதையிளஞ்சிங்கம் கார்மேனிச்செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாராயணனே நமக்கே பறைதருவான் பாரோர் புகழப் படிந்தேலோரெம்பாவாய். 2.வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள் கேளீரோ பார்க்கடலுள் பையத்துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமாறென்றெண்ணி உகந்தேலோரெம்பாவாய்! 3. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்கு சாற்று நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாறி பெய்து ஒங்குபெரும் சன்னலோடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைப்பற்றி - வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்! 4. ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கை கறவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடார்த்தேறு ஊழிமுதல்கன் உருவம்போல் மெய்கறுத்துப் பாழியந்தோளுடைப் பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மாரளகழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய் 5. மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத் தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போயபிழையும் புகுதருவான் இன்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய் 6. புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு கள்ளச்சகடம் கலக்கழியக்காலோச்சி வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெட்ட எழுந்து ஹரியென்ற பேரரவம் உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய் 7. கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன், கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக்கைபேர்த்து வாசநறுங்குழலாய்ச்சிதர், மத்தினால்- ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப்பாடவும் நீ கேட்டே கிடத்தியோ தேசமுடையாய்! திறவேலோரெம்பாவாய் 8. கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து, உன்னைக் கூவுவான்வந்துநின்றோம் கோதுகலமுடைய - பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரைபாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய் 9. தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரியத் தூபம்கமழத் துயிலணை மேல் கண்வளரும் மாமான்மகளே! மணிக்கதவம் தாள் திறவாய் மாமீர் அவளை எழுப்பீரோ?, உன் மகள்தான்- ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ மாமாயன் மாதவன் வைகுந்தன் என்னென்று நாமம் பலவும் நவின்றேலோரெம்பாவாய் 10. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாபார் நாற்றத்துழாய்முடி நாராயணன், நம்மால்- போற்றப்பறை தரும் புண்ணியனால், பணிடொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ஆற்றல் அனந்தல் உடையாய் அருங்கலமே! தேற்றமாய்வந்து திறவேலோரெம்பாவாய் 11.கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றரவல்குல் புனமயிலே! போதராய் சுற்றத்துத் தோழிமார் உலைலாரும் வந்து, நின் - முற்றம் புகுந்து முகிர்வண்ணன் பேர்பாடச் சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி!, நீ - எற்றுக்குறங்கும் பொருளேலோயெம்பாவாய் 12. கனைத்திளங்கற்றெரும் கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால்சோர நனைத்தில்லம்சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழ நின் வாசற்கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனத்தில்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய் 13. புள்ளின்வாய்கிண்டானைப் பொல்லாத அரக்கனைக் கிள்ளிக்களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைகள் உல்லோரும் பாவைக்களம்புக்கார் வெள்ளியெழுந்து வியாழன் உறங்கிற்றுப் புள்ளும் சிலம்பினகாண் போதரிக்கண்ணினாய்! குள்ளக்குளிரக் குடைந்தநீராடாதே பள்ளிக்கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால் கள்ளம்தவிர்ந்தீ கலந்தேலோரெம்பாவாய் 14. உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழு தீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண் செங்கல்பொடிக்கூறை வெண்பல்தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் உங்களை முன்னம் உழுப்புவான் வாய் பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக்கண்ணானைப் பாடேலோரெம்பாவாய் 15.எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? சில்லென்றழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன் வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோரெம்பாவாய் 16. நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில்காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய் ஆயர் சிறுமியரோ உமக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப்பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ நேயநிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய் 17. அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்நகோபாலா! எழுந்திராய் கொம்பனார்க்கல்லாம் கொழுந்தே குலவிளக்கே! எம்பெருமாட்டி ! யசோதாய் அறிவுறாய் அம்பரழூடத்து ஓங்கி உலகளந்த உம்தர்கோமானே உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய் 18. உந்து மதக்களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலி கடைதிறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தன காண், மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச் செந்தாமரைக்கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய். 19.குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்திக்கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய் மைத்தடங்கண்ணினாய்! நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண் எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால் தத்துவமன்று தகவேலோரெம்பாவாய் 20.முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய் செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு - வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய் செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் ஊக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதேயெம்மை நீராட்டேலோரெம்பாவாய் 21. ஏற்ற கலங்கள் உதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப்படைத்தான் மகனே! அறிவுறாய் ஊற்றமுடையாய்! பெரியாய், உலகினில்- தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து உன் அடிபணியாமாபோலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய் 22. அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான-- பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே சங்கமிருப்பார் போல வந்து தலைப் பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல அங்கண் இரண்டும் எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோரெம்பாவாய் 23.மாரிமலை முழைஞ்சில் மன்னிக்கடந்து உறங்கும் சீரிய சிங்கம் அழிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரிநிமிர்ந்து முழங்கிப்புறப்பட்டுப் போதருமா போலே நீ பூவைப்பூவண்ணா! உன் - கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக், கோப்புடைய - சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த - காரியம் ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய் 24. அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி பொன்னச்சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி கன்று குணிலாய் உறிந்தாய்! கழல் போற்றி குன்றுகுடையாய் எடுத்தாய்! குணம் போற்றி வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி என்றென்றும் உன் சேவகமே ஏத்திப்பறை கொள்வான் இன்றுயாம் வந்தோம் இறங்கேலோரெம்பாவாய் 25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை - அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய் 26. மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தியெல்லாம் நடுங்கமுரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே சாலப்பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே கோலவிளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோரெம்பாவாய் 27.கூடாரி வெல்லும் சீர்க கோவிந்தா! உன்தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடையுடுப்போம் அதன்பின்னே பால்சோறு - மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்தாலோரெம்பாவாய் 28. கறவைகள் பின்சென்று கானம் சார்ந்துண்போம் அறிவொன்றுமில்லாத ஆய்ககுலத்து உன்தன்னைப்- பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றுமில்லாத கோவிந்தா!, உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம், அன்பினால் உன்தன்னைச்- சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே இறைவா நீதாராய் பறையேலோரெம்பாவாய் 29. சிற்றஞ்சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து, உன் பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய் பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப்பறை கொள்வா என்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உன்றன்னோடு- உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோரெம்பாவாய் 30.வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் நிருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி அங்கப்பறை கொண்டவாற்றை அணிபுதுவைப்- பைங்கமலத்தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்கத்திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவரெம்பாவாய். ஆண்டாள் வாழி திருநாமம் கோதை பிறந்தவூர் கோவந்தன் வாழுமூர் சோதி மணிமாடந் தோன்றுமூர் - நீதியாய் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகள் ஓதுமூர் வில்லிபுத்தூர் வேதக்கோனூர். பாதகங்கள் தீர்க்கும் பரம னடிகாட்டும் வேதம் அனைத்துக்கும் வித்தாகும் - கோதைதமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு. திருவிடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே மருவாருந்திருமல்லி வளநாடி வாழியே வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே ஆண்டாள் திருவடிகளே சரணம்.
|