|
|||||
ஐஸ்வர்யாவுடன் சண்டை போட்டு பிரியவில்லை � அமலாபால் |
|||||
ஐதராபாத்: ஐஸ்வர்யாவுடன் சண்டை போட்டு பிரியவில்லை என்று நடிகை அமலாபால் கூறினார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ’3′ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஒப்பந்தமான அமலா, கால்ஷீட் சொதப்பலால் படத்திலிருந்து நீக்கப்பட்டார். இப்போது அவருக்குப் பதில் புதிதாக ஒரு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. தமிழில் அடுத்து ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ மட்டுமே அமலா பால் கைவசம் உள்ளது. மீதியெல்லாம் தெலுங்குப் படங்கள்தான். சமீபத்தில் தனது முதல் தெலுங்கு படத்துக்காக படப்பிடிப்புக்கு சென்று வந்த அமலா, தெலுங்கில் நடிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அதிக தெலுங்கு படங்களில் நடிப்பதையே விரும்புவதாகவும் கூறினார்.. தெலுங்குப் படங்களுக்காகத்தான் தமிழ்ப் படங்களை புறக்கணிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, “தெலுங்கில் பெரிய வாய்ப்புகள் வருகின்றன. எனவே அவற்றுக்கு முன்னுரிமை தருகிறேன். ’3′ படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம், கால்ஷீட் இல்லாததுதான். நான் அந்தப்படத்துக்கு அக்டோபரில் தேதி தருவதாகச் சொன்னேன். ஆனால் அவர்கள் செப்டம்பரில் கேட்டார்கள். எனவே அவர்களிடம் நல்ல முறையில் சொல்லிவிட்டே விலகினேன்” என்றார். |
|||||
by Swathi on 22 Sep 2011 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|