இந்த உலகத்திலேயே அமைதிதான் பவர்ஃபுல் ஆயுதம் என்று இளம் நடிகர் ஜீவா கூறியிருக்கிறார். கோ பட வெற்றியைத் தொடர்ந்து ரவுத்திரம் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கும் நடிகர் ஜீவா, ரவுத்திரம் பற்றி அளித்துள்ள பேட்டியில், ரவுத்திரம் ரொம்ப சாதாரணமான கதைதான். "ரௌத்ரம் பழகுன்னு சொல்றோம் இல்லையா? அந்த மாதிரி. ஆனா கோபத்தைத் தெரிஞ்சு வெச்சுக்கணும். படத்துல என்னோட கேரக்டர் பேர் சிவா. ரொம்ப யதார்த்தமான, சாதாரண மிடில் க்ளாஸ் பையன். அவன் கோபத்தை வெளிப்படுத்துறகூட அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்தோடுதானிருக்கும். இந்த உலகத்துலேயே ரொம்பவும் பவர்ஃபுல்லான ஆயுதம் அமைதிதானே? படம் முழுக்கவே கோபம், காதல், சக மனுஷங்களின் மீதான அக்கறைன்னு கலர்புல்லா வந்திருக்கு. இதுல என்ன ஸ்பெஷல்ன்னு கேட்டீங்கன்னா... படத்தோட கதையை ஒவ்வொரு கேரெக்டருமே நகர்த்துவாங்க. கதையோட அமைப்பு அந்த மாதிரி இருக்கு. அப்புறம் படத்துல ஸ்ரேயா ஸ்பெஷல். சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பாண்டிச்சேரி, கேரளான்னு பாடல்கள் எடுத்திருக்காங்க. ரொம்ப நல்லா வந்திருக்குன்னு எல்லாரும் வாழ்த்துறது சந்தோஷமாயிருக்கு, என்று கூறியுள்ளார்.
|