LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF
- ஸ்ரீமத் பகவத்கீதை

நான்காவது அத்தியாயம் -ஞானகர்மஸந்யாஸ யோகம்

 

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத சதுர்தோ அத்யாய:।



ஞானகர்மஸந்யாஸ யோகம்

 

ஸ்ரீபகவாநுவாச।
இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம்।
விவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவே அப்ரவீத்॥ 4.1 ॥


பகவான் கூறினார்: அழிவற்ற இந்த யோக முறையை முன்பு சூரிய தேவனுக்கு கூறினேன். சூரியன் தன் புதல்வனான வைவஸ்வத மனுவுக்குச் சொன்னார், மனு தன் மகனான இக்ஷ்வாகுவுக்கு இதை உபதேசித்தார்.

ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது:।
ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரம்தப॥ 4.2 ॥


பரந்தப அர்ஜூன! இவ்வாறு பரம்பரை முறையில் கிரமப்படி வந்துள்ள இச்செய்தியானது புனிதமான மன்னர்களாலும் அறியப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் மறைந்தது போலத் தோன்றுகிறது.

ஸ ஏவாயம் மயா தே அத்ய யோக: ப்ரோக்த: புராதந:।
பக்தோ அஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம்॥ 4.3 ॥


நீ எனக்கு நண்பனும், பக்தனுமாதலால் இறைத்தொடர்பு பற்றிய இவ்விஞ்ஞானம் இன்று உனக்கு என்னால் கூறப்படுகிறது. இதன் ரகசியத்தையும் உன்னால் புரிந்து கொள்ள முடியும்.

அர்ஜுந உவாச।
அபரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:।
கதமேதத்விஜாநீயாம் த்வமாதௌ ப்ரோக்தவாநிதி॥ 4.4 ॥


அர்ஜூனன் கூறினார்: பிறப்பினால் உமக்கு முந்தையவர் விவஸ்வான், அவருக்கு நீர் எப்படி உபதேசித்தீர்?

ஸ்ரீபகவாநுவாச।
பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந।
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரம்தப॥ 4.5 ॥


பகவான் கூறினார்: பற்பல பிறவிகளை நாம் கடந்துள்ளோம். அவற்றை நாமறிவோம், நீயறியாய். நான் பிறப்பற்றவன். எல்லா உயிர்களுக்கும் இறைவன். இருந்தாலும், திவ்வியமான ஆன்மீக சரீரத்துடன் யுகம்தோறும் தோன்றுகிறேன்.

அஜோ அபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஷ்வரோ அபி ஸந்।
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா॥ 4.6 ॥


நான் பிறப்பற்றவன். எல்லா உயிர்களுக்கும் இறைவன். இருந்தாலும், திவ்வியமான ஆன்மீக சரீரத்துடன் யுகம்தோறும் தோன்றுகிறேன்.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத।
அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்॥ 4.7 ॥


எப்பொழுதெல்லாம் அறநெறிகளுக்கு தொல்லைகள் ஏற்பட்டு அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, அப்போதெல்லாம் என்னை நான் இவ்வாறு உருவித்துக் கொள்கிறேன்.

பரித்ராணாய ஸாதூநாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்।
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே॥ 4.8 ॥


சாதுக்களைக் காக்கவும், கொடியவர்களை ஓய்ப்பதற்காகவும் தர்மத்தை ஸ்தாபிக்கவும் யுகந்தோறும் வருகிறேன்.

ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:।
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுந॥ 4.9 ॥


எனது திவ்யமான பிறப்பு, செயல்கள் இவற்றின் மேலான தன்மைகளை உள்ளபடி அறிபவன், ஜட உடலை விட்டபின் மீண்டும் இங்கு பிறப்பதில்லை, அவன் என்னை அடைகிறான்.

வீதராகபயக்ரோதா மந்மயா மாமுபாஷ்ரிதா:।
பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா:॥ 4.10 ॥


யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்।
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஷ:॥ 4.11 ॥


ஆசை, பயம், சினம் இவற்றை விட்டு என்னிடம் சரணடைந்த பலர், ஞானதவத்தால் தூய்மையடைந்து என்னிடம் நல்ல முறையில் அன்பு கொண்டுள்ளனர். என்னிடம் அவர்கள் சரணடைவதற்கேற்ப நான் பலன் அளிக்கிறேன். எவ்வழியிலும் அவர்கள் என்னையே பின்பற்றுகின்றனர்.

காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா:।
க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா॥ 4.12 ॥


பலனிச்சையால் மனிதர்கள் தேவர்களைப் பூசிக்கின்றனர். இத்தகு செயல்களுக்கு உடனடி விளைவுகளும் அமைகின்றன.

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஷ:।
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்॥ 4.13 ॥


குணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப மனிதரில் நால்வகைப் பிரிவுகள் என்னால் ஏற்படுத்தப்பட்டன. (பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர்). எனினும் மாற்றமில்லாத என்னை, செயலுக்கு அப்பாற்பட்டவன் என்பதை அறிவாயாக.

ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா।
இதி மாம் யோ அபிஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே॥ 4.14 ॥


எச்செயலும் என்னை பாதிப்பதுமில்லை. செயலின் பலனுக்காக நான் ஏங்குவதுமில்லை. இவ்வாறு என்னை அறிபவன் செயலின் விளைவுகளால் கட்டுப்படுவதுமில்லை.

ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி:।
குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம்॥ 4.15 ॥


முன்னோர்கள்கூட இவ்விதம் செயல்பட்டு விடுபட்டுள்ளனர். நீயும் அதுபோல மேலான உணர்வுகளுடன் கடமைகளைச் செய்.

கிம் கர்ம கிமகர்மேதி கவயோ அப்யத்ர மோஹிதா:।
தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே அஷுபாத்॥ 4.16 ॥


செயல்களே ஒருவனை விடுபடுத்துகின்றன. எது செயல், எது செயலற்ற நிலை என்பதைத் தீர்மானிப்பதில் அறிவாளியும் குழம்புகிறான். எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடக் கூடிய அத்தகைய செயல்களைப் பற்றி உனக்கு நான் விளக்குகிறேன்.

கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண:।
அகர்மணஷ்ச போத்தவ்யம் கஹநா கர்மணோ கதி:॥ 4.17 ॥


சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட செயல்கள் (கர்மா), விலக்கப்பட்ட செயல்கள் (விகர்மா), மற்றும் விளைவற்ற செயல்கள் (அகர்மா – பகவானுக்காக ஆற்றப்படுபவை) உள்ளன. அறிவதற்கு கடினமாயினும், இவற்றை அறிந்தே ஒருவன் செயல்பட வேண்டும்.

கர்மண்யகர்ம ய: பஷ்யேதகர்மணி ச கர்ம ய:।
ஸ புத்திமாந்மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத்॥ 4.18 ॥


செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் காண்பவனே அறிஞன். அவன் செயல்பட்டாலும் விடுபட்டவனாவான்.

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காமஸங்கல்பவர்ஜிதா:।
ஜ்ஞாநாக்நிதக்தகர்மாணம் தமாஹு: பண்டிதம் புதா:॥ 4.19 ॥


புலன் நுகர்வுக்கான நோக்கமின்றி செயல்படுபவன் சிறந்தவன். அவன் தனது பக்குவத்தால் விளைவுகளை எரித்து விடுவதால் அறிஞர்கள் அவனைப் போற்றுகின்றனர்.

த்யக்த்வா கர்மபலாஸங்கம் நித்யத்ருப்தோ நிராஷ்ரய:।
கர்மண்யபிப்ரவ்ருத்தோ அபி நைவ கிம்சித்கரோதி ஸ:॥ 4.20 ॥


செயலின் பலனில் பற்றற்று, சதா திருப்தியுடன் சார்பற்று இருப்பவன், செயல்பட்டாலும் செயலற்றவனே ஆவான்.

நிராஷீர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்ரஹ:।
ஷாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்॥ 4.21 ॥


அப்படிப்பட்டவனது மனதும் அறிவும் கட்டுப்பட்ட நிலையில் உரிமை உணர்வின்றி குறைந்தபட்சத் தேவைகளுக்காக செயலாற்றுகிறான். அவன் தீய விளைவுகளால் பாதிக்கப்படுவதில்லை.

யத்ருச்சாலாபஸம்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர:।
ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வாபி ந நிபத்யதே॥ 4.22 ॥


தானாய்க் கிடைப்பதில் திருப்தி அடைந்தவன், இருமைகளிலிருந்து விடுபட்டவன், பொறாமையற்றவன், வெற்றி – தோல்விகளில் சமமாய் இருப்பவன் – இவன் செயலாற்றினாலும் விளைவுகளால் பந்தப்படுவதில்லை.

கதஸங்கஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநாவஸ்திதசேதஸ:।
யஜ்ஞாயாசரத: கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே॥ 4.23 ॥

 

ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவி: ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம்।
ப்ரஹ்மைவ தேந கந்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா॥ 4.24 ॥

 

தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந: பர்யுபாஸதே।
ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி॥ 4.25 ॥

 

ஷ்ரோத்ராதீநீந்த்ரியாண்யந்யே ஸம்யமாக்நிஷு ஜுஹ்வதி।
ஷப்தாதீந்விஷயாநந்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி॥ 4.26 ॥

 

ஸர்வாணீந்த்ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே।
ஆத்மஸம்யமயோகாக்நௌ ஜுஹ்வதி ஜ்ஞாநதீபிதே॥ 4.27 ॥

 

த்ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோகயஜ்ஞாஸ்ததாபரே।
ஸ்வாத்யாயஜ்ஞாநயஜ்ஞாஷ்ச யதய: ஸம்ஷிதவ்ரதா:॥ 4.28 ॥

 

அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணே அபாநம் ததாபரே।
ப்ராணாபாநகதீ ருத்த்வா ப்ராணாயாமபராயணா:॥ 4.29 ॥

 

அபரே நியதாஹாரா: ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி।
ஸர்வே அப்யேதே யஜ்ஞவிதோ யஜ்ஞக்ஷபிதகல்மஷா:॥ 4.30 ॥

 

யஜ்ஞஷிஷ்டாம்ருதபுஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதநம்।
நாயம் லோகோ அஸ்த்யயஜ்ஞஸ்ய குதோ அந்ய: குருஸத்தம॥ 4.31 ॥

ஏவம் பஹுவிதா யஜ்ஞா விததா ப்ரஹ்மணோ முகே।
கர்மஜாந்வித்தி தாந்ஸர்வாநேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே॥ 4.32 ॥


குருவம்சத்தவனே, யாகங்களின்றி இவ்வுலகில் யாரும் சுகமாக இருக்க முடியாது. அப்படி இருக்கையில் மறுவுலகைப் பற்றி என்ன சொல்வது? இந்த யாகங்கள் அனைத்தும் வேதங்களால் அங்கீகரிக்கப்பட்டவை. கர்மங்களிலிருந்து தோன்றியவை. இதையறிந்து விடுதலையடைவாயாக.

ஷ்ரேயாந்த்ரவ்யமயாத்யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ: பரம்தப।
ஸர்வம் கர்மாகிலம் பார்த ஜ்ஞாநே பரிஸமாப்யதே॥ 4.33 ॥


பரந்தபா, பொருட்களினாலான யாகத்தை விட, ஞான யக்ஞம் சிறந்தது. ஏனெனில் எல்லா கர்ம யக்ஞங்களும் ஞானத்தில் தான் முற்றுப்பெறுகின்றன.

தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஷ்நேந ஸேவயா।
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஷிந:॥ 4.34 ॥


ஆன்மீக குருவுக்குப் பணிந்தும், பணிவிடைகள் புரிந்தும் கேள்விகள் கேள். உண்மையை உணர்ந்த அவர், உனக்கு உண்மை ஞானத்தை உணர்த்துவார்.

யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ।
யேந பூதாந்யஷேஷாணி த்ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ மயி॥ 4.35 ॥


அதன்பின் மயக்கம் நீங்கி, எல்லா உயிரினங்களும் என் அங்கமே, அவை என்னுடையவை, என்னில் இருப்பவை என்றறிவாய்.

அபி சேதஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாபக்ருத்தம:।
ஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ வ்ருஜிநம் ஸம்தரிஷ்யஸி॥ 4.36 ॥


பெரும் பாபியாக நீ கருதப்பட்டாலும் ஞானப் படகினால், துன்பக்கடலைத் தாண்டுவாய்.

யதைதாம்ஸி ஸமித்தோ அக்நிர்பஸ்மஸாத்குருதே அர்ஜுந।
ஜ்ஞாநாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே ததா॥ 4.37 ॥

ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருஷம் பவித்ரமிஹ வித்யதே।
தத்ஸ்வயம் யோகஸம்ஸித்த: காலேநாத்மநி விந்ததி॥ 4.38 ॥

ஷ்ரத்தாவாம்ல்லபதே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்ரிய:।
ஜ்ஞாநம் லப்த்வா பராம் ஷாந்திமசிரேணாதிகச்சதி॥ 4.39 ॥


தீச்சுடரானது விறகுகளை சாம்பலாக்குவது போல், ஞானமானது கர்ம பந்தங்களை எரிக்கின்றது. ஞானம் போல் சிறந்ததும், தூயதுமில்லை. அதுவே யோக கனியாகும். இதைப்பெற்றவன் காலப்போக்கில் தன்னுணர்வில் திளைக்கின்றான்.

அஜ்ஞஷ்சாஷ்ரத்ததாநஷ்ச ஸம்ஷயாத்மா விநஷ்யதி।
நாயம் லோகோ அஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஷயாத்மந:॥ 4.40 ॥


சிரத்தையுள்ளவன், புலனடக்கத்தாலும், ஞானத்தாலும், பரத்தில் ஆழ்ந்து, ஆன்மீக அமைதியை அடைகிறான். வேதங்களில் நம்பிக்கை இல்லாதவன் நாசமாகிறான், அவனுக்கு இவ்வுலகிலும், எவ்வுலகிலும் இன்பமில்லை.

யோகஸம்ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞாநஸம்சிந்நஸம்ஷயம்।
ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தநம்ஜய॥ 4.41 ॥


செயலின் பலனில் இச்சையின்றி இறையருளால் சந்தேகங்கள் போக்கப்பட்டு, தன்னில் நிலைபெற்றவனது செயல்கள் அவனை பந்தப்படுத்துவதில்லை.

தஸ்மாதஜ்ஞாநஸம்பூதம் ஹ்ருத்ஸ்தம் ஜ்ஞாநாஸிநாத்மந:।
சித்த்வைநம் ஸம்ஷயம் யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத॥ 4.42 ॥


எனவே அர்ஜூனா, அறியாமையால் விளைகின்ற சந்தேகங்களை, அறிவெனும் ஆயுதத்தால் அழித்துவிட்டு, யோக கவசம் அணிந்து எழுந்து போரிடு.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
ஜ்ஞாநகர்மஸம்ந்யாஸயோகோ நாம சதுர்தோ அத்யாய:॥ 4 ॥



ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'ஞானகர்மஸந்யாஸ யோகம்' எனப் பெயர் படைத்த நான்காவது அத்தியாயம் நிறைவுற்றது.

by uma   on 17 Jan 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கண்ணகி கோயில் திருவிழா கோலாகலம். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கண்ணகி கோயில் திருவிழா கோலாகலம்.
மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி எழுந்தருளினார் கள்ளழகர். மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி எழுந்தருளினார் கள்ளழகர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்.
உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா? உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா?
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு. பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு.
பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள். பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.