|
||||||||
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் |
||||||||
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் உலகப்பார்வையை கொண்டது நமது தமிழ்மொழி. இதில் பழந்தமிழர் வீரம் போற்றும் புறநானூறு, அக வாழ்க்கையை கொண்டாடும் அகநானூறு, இலக்கணம் போற்றும் தொல்காப்பியம் , வாழ்வியல் பேசும் திருக்குறள் என்று அனைத்தையும் கொண்டுள்ள ஒரே மொழி நம் தமிழ் மொழியாகும். சங்க இலக்கியப் பாடல்கள் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும், அதே மொழிநடையில் இன்றும் நம்மால் படித்து புரிந்துகொள்ள முடிகிறது என்றால் அது தமிழுக்கு மட்டுமே உள்ள தகுதியும் சிறப்புமாகும். உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும் தமிழ் இனம் தமிழ்ச்சங்கம் அமைத்து , இலக்கியக் குழு, கலைக்குழு , தமிழ்ப்பள்ளிகள் அமைத்து தங்களின் மொழி,கலை,பண்பாட்டை, வாழ்வியலை பாதுகாப்பதிலும், தழைத்தோங்கச் செய்வதிலும் உறுதியாக இருக்கிறோம். எந்த நாட்டிலும் தமிழ்ச்சங்க மேடைகளில் பிறமொழிகள் அனுமதிக்கப்படுவதில்லை . இது பிறமொழி பேசும் அண்டை மாநில மக்களுக்கும் வியப்பைத் தருகிறது. உலகின் 7102 மொழிகளில் ஏழு மொழிகள் மட்டுமே செம்மொழி மொழிகளாக தகுதி பெற்றுள்ளது. அதில் தமிழ்மொழி மட்டுமே ஒரு செம்மொழிக்காக வரையறுக்கப்பட்டுள்ள 11 தகுதிகளையும் பெற்றுள்ளது என்று பெருமையோடு குறிப்பிடுவோம். தமிழர்களின் உன்னதமான வாழ்வியல் கோட்பாடுகளாக அறம் , பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு நிலைகளை அறிந்து செம்மையாக வாழ்ந்துள்ளனர். நம் சங்க இலக்கியங்கள் கற்பனைகள் அல்ல, அவை அந்தந்த காலக்கட்டத்தின் வாழ்வியலை பிரதிபலிப்பவை. . சங்க இலக்கியங்களைக் கற்போம் . . தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம். |
||||||||
by Swathi on 27 Apr 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|