பிரதமை :
பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை (பிரதமை என்றால் முதன்மை என்று பொருள்)அதனால் தான் பிரதமை என்பது முதல் நாள்.
துவிதை :
துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது வழக்கம்.
திரிதியை :
திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று என்று பொருள்.
சதுர்த்தி :
சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண்டது.
பஞ்சமி :
பஞ்ச பூதங்களின் எண்ணிக்கை ஐந்து.ஆகவே பஞ்சமி ஐந்தாம் நாளாக வருகிறது.
சஷ்டி என்றால் ஆறாம் நாள்.
சப்தமி :
சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் அது குறிப்பிடுகிறது.
அஷ்டமி :
அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் குறிக்கிறோம்.அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.
நவமி :
நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் நமக்கு தெரிந்தவையே.
தசமி :
தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து என்பது பொருள்.தசாஅவதாரம் என்று கடவுளின் அவதாரங்களைக் குறிப்பிடுகிறோம்.
ஏகாதசி :
ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.
துவாதசி :
துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.
திரியோதசி :
திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.
சதுர்த்தசி :
சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.
|