தேவையானவை :
கோஸ்- கால்கிலோ
வெங்காயம்- ஒன்று
பச்சைமிளகாய்- இரண்டு
காய்ந்த மிளகாய்- ஒன்று
தேங்காய்ப் பூ - காலக் கப்
மஞ்சத்துள் - அரைத் தேக்கரண்டி
கடுகு சீரகம் - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு- ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு- இரண்டு தேக்கரண்டி
கறிவேப்பிலை-ஒரு கொத்து
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு- அரைத் தேக்கரண்டி
செய்முறை :
1.கோஸ் வெங்கயம் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
2.கடலைப் பருப்பை நீரில் போட்டு கழுவி வைக்கவும்.
3.கடாயில் எண் ணெயை காயவைத்து கடுகு சீரகத்தைப் போட்டு பொரியவிடவும்.
4.பிறகுகறிவேப்பிலை,உளுத்தம் பருப்பு காய்ந்தமிளகாய் மற்றும் ஊறிய கடலைப் பருப்பை போட்டு வறுக்கவும்.
5.பின்பு வெங்காயம் பச்சை மிளகாயைப் பொட்டு வதக்கவும், பிறகு,
6.நறுக்கிய கோஸ்ஸைப் போட்டு உப்பு மற்றும் மஞ்சத்துளை தூவி நன்கு கிளரவும்.
7.தேவையானால் சிறிது நீரை தெளிக்கவும்.
8.கோஸ் வெந்தவுடன் தேங்காயைப் போட்டு கிளறி இறக்கவும்.
|