திருக்குறளைக் காதலிக்கும் ஓய்வுபெற்ற வட்டாட்சியர்
சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் 87 வயதிலும் ஒருவர் திருக்குறளை மனப்பாடமாக ஒப்பிக்கிறார். ஓய்வு பெற்ற வட்டாட்சியரான இவர் திருக்குறளை இளைஞர்களுக்கும் கற்பிக்கிறார். பணிக் காலத்திலேயே திருக்குறளை எப்போதும் கையில் வைத்திருக்கும் இவர், எந்த அதிகாரத்திலிருந்து எந்தவொரு குறளைக் கேட்டாலும் மனப்பாடமாகச் சொல்கிறார். மானாமதுரை பூக்காரத் தெருவைச் சேர்ந்த இவரின் பெயர் ஜவஹர்லால் ஆகும். அவரது வீட்டின் அருகேயுள்ள இளைஞர்களைத் திருக்குறள் படிக்கும்படி வலியுறுத்துவதோடு சொல்லியும் தருகிறார்.
|