ஒவ்வொரு மாதமும் ஒருவரது ராசியிலிருந்து சந்திரன் எட்டாம் ராசியில் சந்திரன் கடந்து செல்லும் 2 1/4 நாட்களே ஜோதிட சாஸ்திரத்தில் சந்திராஷ்டமம் (சந்திரன் அஷ்டம ஸ்தானத்தில் செல்லும் நாள்) என்று சொல்லப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட நாட்களில் பொதுவாக எந்த சுப காரியங்களையும் தவிர்ப்பது நல்லது. நீண்ட தூரப்பிரயாணம், நிச்சயத்தார்த்தம், திருமணம், கிரகப்பிரவேசம், புதிய திட்டங்களை ஆரம்பித்தல், புதிய ஒப்பந்தம் செய்தல், நிலம் அல்லது வீடு வாங்குதல், பத்திரப் பதிவு செய்தல், வேலைக்கு அல்லது கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பம் செய்தல் போன்ற வாழ்க்கையில் முக்கியமான நிகழ்ச்சிகளை சந்திராஷ்டம நாளில் செய்யக்கூடாது. அப்படியே செய்யவேண்டிய மிக அவசியமான ஒரு நிர்பந்தம் வந்தால் சந்திராஷ்டமத்திலேயே தாரா பலன் தரும் நட்சத்திரம் வரும் நாளில் ஒரு குறிப்பிட்ட நல்ல நேரம் பார்த்து நாம் செய்ய வேண்டிய சுப காரியங்களைச் செய்யலாம். ஆனால் சந்திராஷ்டமத்தில் ஜன்ம, விபத், பிரத்யக், வதை தாரைகளில் கண்டிப்பாக எந்த சுப செயல்களையும் செய்யக்கூடாது.
ஜோதிடம் என்பது ஒரு ஒளி அல்லது வெளிச்சம். இருட்டில் இருப்பவருக்கு வழி காட்டும் வெளிச்சம். ஒளி தெரியும் வழியில் செல்பவர்கள் சரியான இலக்குகளை / சேர வேண்டிய இடத்தை சுலபமாக அடையலாம். ஜோதிட ஒளி காட்டும் வழியில் செல்லுங்கள். வாழ்க்கையில் ஒளி மயமான எதிர்காலம் பெற்று மகிழுங்கள்!
|