சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
சூரியக்குடும்பத்தில் 6வது கோளாக இருக்கும் சனி, சூரியனிலிருந்து சுமார் 142 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்து உள்ளது. சனிக்கோளின் நடுப்பகுதியை சுற்றி தட்டையாக வளையங்கள் காணப்படுகிறது.
சனிக்கோளுக்கு அழகு சேர்க்கும் இந்த வளையங்கள் பனித் துகள்கள், பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளால் ஆனவை ஆகும். மற்ற கோள்களில் இல்லாது சனிக்கோளில் மட்டுமே இருக்கும் இந்த வளையங்கள், தற்போது படிப்படியாக மறைந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து உள்ளனர்
சனிக்கோளின் வளிமண்டலத்தில் அம்மோனியா படிகங்கள் இருப்பதால் வெளிர் மஞ்சள் நிறம் கொண்டுள்ளது. சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டான் புதன் கோளை விடவும் பெரியது எனவும் கூறப்படுகிறது.
சூரியக்குடும்பத்தில் நீரை விட குறைவான அடர்த்தி உள்ள கோள் சனி மட்டுமே என்பதை அவசியம் குறிப்பிட வேண்டும். இந்த நிலையில் சனிக் கோளின் வளையங்களில் தூசிகள் படிந்ததால்தன் பனிக்கட்டிகள் உருகி வருகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் சனிக்கோளில் இருக்கும் வளையங்கள் அடுத்த 100 மில்லியன் ஆண்டுகளில் முற்றிலும் மறைந்துவிடும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
|