|
||||||||
சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி |
||||||||
செம்பரத்தைப் பூ தேன் இளகம் தேவையான பொருட்கள்: செம்பரத்தைப் பூ 250 எலுமிச்சம் பழம் . 50 தேன். 1 லிட் எலுமிச்சம் பழங்களைப் பிழிந்து வடிகட்டிய சாற்றை 5 லிட். கொள்ளவும் , மூடியும் உடைய ஒரு பீங்கான் பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். 50 எலுமிச்சம் பழங்களைச் சாறு பிழிந்து வடிகட்டி அந்த பீங்கான் பாத்திரத்தில் எடுக்கவும் 250 செம்பரத்தைப் பூக்களின் இதழ்களைத் தனியாகப் பிய்த்த எடுத்து பீங்கான் ஜாடியில் உள்ள எலுமிச்சம் பழச்சாற்றில் போட்டுக் கிளறி மூடி 3-4மணி நேர இடை வெளியில் கிளறி விட்டுக் கொண்டே 24 மணிநேரம் மூடியபடியே வைக்கவும் . பின்னர் ஜாடியில் உள்ள ஊரலை ஈர அரவைக் கருவியில் (MIXI) போட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து ஒரு எவர் சில்வர் பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.. ஒரு கெட்டியான வாணலியை அடுப்பிலேற்றிச் செம்பரத்தைப் பூ எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் புளிக்க வைத்து அரைத்து வைத்துள்ள கூழ்மத்தை ஊற்றி சிறு தீயில் அடிப்பிடிக்காமல் பொருமையாய்க் காய்ச்சவும். கெட்டியாய் தயிர் பதத்திற்குத் தளதளவென வரும்போது தேனைச் சேர்த்து அடுப்புத் தீயை அனைத்து ஆறவைத்து எடுத்துக் கண்ணாடி குப்பியில் சேமிக்கவும். தினம் காலை உணவுக்கு முன் ஒரு மேசைக் கரண்டி அளவு தினம் சாப்பிடவேண்டும். உணவுக் கட்டுப்பாட்டுடன் ( avoiding oily, fatty, deep fried foods) 6 மாதத்திற்கு மேல் சாப்பிடக் குருதி அழல் (BLOOD PRESSURE) இரத்தக்குழாய் அடைப்பு (BLOOD CLOTS) அவதிகள் சீராகும் இஞ்சி பூண்டு இதய கல்பம்
“ காலையில் இஞ்சி” , “ இளமை காக்கும் இஞ்சித்தேன்“, “இஞ்சிச் கஞ்சி குஞ்சிக்கு நல்லது “ (குஞ்சி - தலை முடி,குடுமி-நரை தடுக்கும்) “ நெஞ்சு சளிக்கு இஞ்சி மொரப்பா” என்னும் பழமொழிகளும் “கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே” , என்னும் அருந்தமிழ் மருத்துவம் 500 வரிகளும் இஞ்சி , பூண்டு களின் மருத்துவச் சிறப்பை பறைசாற்றுகின்றன. மலைப்பூண்டு, நாட்டுப்பூண்டை விடக் காரமானது. இவற்றில் எந்தப் பூண்டை வேண்டுமானாலும் மருந்துக்குப் பயன்படுத்தலாம் தேவையான பொருட்கள்: 1) இஞ்சி (முற்றிய தோல் சீவியது) 1 அங்குலம் 2) பூண்டுப் பல்(தோல் நீக்கியது). 4 3) மிளகு. (கரு மிளகு). 4 4) துளசி (நல்ல துளசி(அ) நாட்டு துளசி(அ) கருந்துளசி. இலைகள் 9 5) நாட்டுப் பசும்பால். 1/4 கோப்பை. செய்முறை:
பூண்டையும் இஞ்சியையும் 2 மி.மீ அளவு சன்ன மான துண்டுகளாகப் பொடித்துக் கொள்ளவும் . மிளகை உடைக்காமல் முழுதாக எடுத்துக் கொள்ளவும். துளசியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அனைத்தையும் பாலில் போட்டு ஒரு கெட்டியான பாத்திரத்தில் சிறுதீயாக வைத்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். பால் சுண்டி கோவா போல் வந்ததும் சுரண்டி உருட்டி எடுத்துக் கொள்ளவும். இரவு சாப்பாட்டுக்குப் பின் இதைச் சாப்பிடவும். நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாகப் பாலின் அளவைக் குறைந்துகொண்டே வர இஞ்சி,பூண்டு வேகிற நேரம் குறைந்து அரை வேக்காடு கால் வேக்காடு எனக் குறைத்து, சாப்பிட வாயிம் வயிறும் பழகிக் கொள்ளும். பிறகு சிரமமின்றி பால் சேர்த்து வேக வைக்காமலே பச்சை இஞ்சி. பூண்டு, மிளகு துளசியை வாயிலிட்டு மென்று அப்படியே சாப்பிடப் பழகிக் கொள்ளலாம். பச்சையாகச் சாப்பிடுவதுதான் சரியான முறை. ஆனால் எடுத்ததும் பச்சையாகச் சாப்பிட்டால் பலருக்கு வயிறு எரிச்சல் ஏற்பட்டு இதைச் சாப்பிடாது விட்டுவிடுவர். இதை எவரும் சிரமமின்றி சாப்பிட்டுப் பலனடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முறையைச் சொன்னேன். இந்தத் தயாரிப்பை 30 ( அ) 35 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் வருமுன் காக்கும் நடவடிக்கையாக எடுத்துக் கொண்டு இதயத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம். இதைத் தயாரிக்க அனைத்துப் பொருட்களும் வீட்டிலேயே இருக்கிறது. இதை ஆயுள் முழுதும் எவ்வளவு காலம் சாப்பிட்டாலும் எந்த கெடுதியும் இல்லை. நடந்தால் மூச்சு வாங்குவதும் , நெஞ்சு வலி வருவதும் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு தொடர்ந்து நடந்தால் சரியாகிப்போவதும், தொடர்ந்து படியேறினால் நெஞ்சு வலிப்பதும், மூச்சு வாங்குவதும் இதய நோயின் முன்னறிவிப்புகள். நமது இதயம் தரும் எச்சரிக்கை. இதயம் தனது பிரச்சனையைத் தெரிவிக்கும் சமிக்ஞைகள். எனது அறிவுரையின்படி இந்த நிலையில் இம்மருந்துணவால் நலம்பெற்றவர்கள் பலர் |
||||||||
by Swathi on 14 Oct 2019 3 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|