"குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா", "பிரம்மம் ஒகடே பரபிரம்மம் ஒகடே" போன்ற பாடல்களை அதிகாலைப்பொழுது விஜய் சேனலில் கேட்கும்போது, நமக்குத் தெரியாமலே உதடுகள் அந்த வரிகளை சில கணங்களுக்கு முணுமுணுக்கின்றன. பக்தியில் கண்களை மூடியவண்ணம் பாடலோடு பாடலாக மூழ்கி விடுகிறேhம். அடுத்து வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் வழங்கும் ஆன்மீக சொற்பொழிவைக் கேட்கும்போது நமக்குள்ளேயிருக்கும் தீமைகளை அகற்ற வேண்டுமென்று உறுதிமொழி எடுத்துக் கொள்கிறோம். அதன்பிறகு அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலையோடு ஒன்றிணைந்து இயந்திரத்தைப் போல செயல்படத் தொடங்குகிறோம். சதா பணியிலே மூழ்கியிருக்கும் ஒவ்வொருவனுக்கும் இவைகளைப் பற்றி யோசிப்பதற்குக்கூட நேரம் பத்தாது. எடுத்துக்கொண்ட உறுதிமொழி, கேட்ட பக்திப் பாடல்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, வேலை வேலையென்று உழைத்துக் கொண்டிருக்கிறான். வீடு திரும்பும்போது சோர்வையும் கூடவே துணைக்கு அழைத்துச் செல்லுகிறான். ஒவ்வொரு மனிதனும் சிலமணி நேரத்தை தனக்காக ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தால், கடவுளைப் பற்றி நினைத்திருக்கலாம். தன்னைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும் முயற்சி எடுத்திருக்கலாம். வாழ்க்கையில் உழைப்பு ஒரு அங்கமாகமிருக்கலாம். ஆனால் உழைப்பே வாழ்க்கையாக இருப்பது நல்லதல்ல.
|