|
||||||||
தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு – 3 - பேராசிரியர் முனைவர் பா. இறையரசன் – பகுதி – 2 |
||||||||
தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு – 3 தனித்துவமிக்க தமிழ்: இன்றைய இளம் எழுத்தாளர்கள் நல்ல தமிழில் எழுத வேண்டும் என்று முனைவர் பா. இறையரசன் அவர்கள் கூறுகிறார். பிறமொழிகள் தமிழ் மொழிக்குள் புகுவதைத் தடுக்க வேண்டும். அந்த காலத்தில் சமஸ்கிருத மொழி எவ்வாறு தமிழில் புகுந்ததோ, அது போலத் தற்காலத்தில் ஆங்கில மொழி புகுந்து வருகிறது. இதனை, ஆரம்பக் காலத்திலேயே தடுக்க வேண்டும் எனக் கூறுகிறார் முனைவர் பா. இறையரசன் அவர்கள். இளம் எழுத்தாளர்கள் தனித்தமிழில் எழுதி தமிழை வளர்க்க வேண்டும் என்றும் கூறுகிறார். பிறமொழியின் சொற்றொடர் அமைப்பைத் தமிழ் மொழிக்குப் பயன்படுத்துகிறோம், அதனை அறவே அகற்ற வேண்டும், தங்களது குழந்தைகளுக்கு ஸ,ஜ,ஷ,ஹ,ஶ்ரீ போன்ற எழுத்துக்களில் பெயர்; வைக்காமல் நல்ல தமிழில் பெயர்களை வைக்க வேண்டும் என்றும் வேண்டுகிறார். தமிழ் என்று நினைத்து நாம் பயன்படுத்தும் பல சொற்கள் கூட சமஸ்கிருதம் கலந்தவை. எனவே அவற்றையெல்லாம் அகற்றி தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்கிறார் முனைவர் பா. இறையரசன் அவர்கள். மேலும், நிமிஷம், ஜன்னல், வேஷ்டி போன்ற சொற்கள் எல்லாம் தமிழ்ச் சொற்கள் அல்ல என்கிறார். மணித்துளி, சாளரம், வேட்டி போன்றவையே அவற்றிற்கான தமிழ்ச் சொற்கள். எனவே தனித்தமிழ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் முனைவர் பா. இறையரசன் அவர்கள். ஒருங்கு குறி போராட்டம்: தமிழ் மொழியானது கணினியில் இடம்பெற வேண்டுமானால் அதற்கு ஜ,ஸ,ஷ,ஶ்ரீ,ஹ அடங்கிய 26 எழுத்துக்கள் அவசியம் சேர்க்கப்பட வேண்டும் என்ற சூழல் ஏற்பட்ட போது அதனைத் தொடர்ந்து போராடி எதிர்த்தவர் முனைவர் பா. இறையரசன் அவர்கள் ஆவார். இதனால் ஏற்பட்ட பல இன்னல்களுக்குப் பிறகு அப்போதைய தமிழக முதலமைச்சர் பரிந்துரையின் படி அப்போராட்டம் வெற்றி கண்டது என்றும் குறிப்பிடுகிறார். ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் எது தமிழ், எது பிறமொழி சொல் என்று பிரித்தறிய முடியாமல் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். எனவே, தமிழ் ஆசிரியர்கள் நல்ல புலமை பெற்றவர்களாக இருத்தல் அவசியம் என்கிறார், மேலும் தொல்காப்பியம், நன்னூல், சங்க இலக்கியம் போன்ற இலக்கியங்கள் படித்தவர்களே தமிழ் ஆசிரியர்களாக வர வேண்டும் என்றும் கூறுகிறார். படித்தவர்கள் பரப்ப வேண்டியவை: பிறமொழியானது பாமர மக்களை விடப் படித்தவர்களை எளிமையாக சென்றடைந்து விடுகிறது. படித்தவர்களே பிறமொழிகளைப் பரப்புபவர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். எனவே படித்தவர்கள் முதலில் தமிழ் மொழியை நன்கு அறிந்து பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். தமிழ் மொழியைப் பரப்புபவர்களாகப் படித்தவர்கள் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். தஞ்சாவூர் தமிழ் பேரவை: தஞ்சாவூர் தமிழ் பேரவையைத் தொடங்கியவர் முனைவர் பா. இறையரசன் அவர்கள் ஆவார். 25 ஆண்டுகள் அதன் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். அப்போது அனைவருக்கும் ‘பொங்கல் வாழ்த்து’ மடலாக எழுதி அனுப்புவது என்ற வழக்கம் இருந்தது. இவர் அத்துடன் கோரிக்கைகளை எழுதி அனுப்புவது என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாகக் குறிப்பிடுகிறார். தமிழ் மொழியானது செம்மொழியாக்கப்பட வேண்டும், திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும், ‘செய்திகள் வாசிப்பது’ என்று வானொலி, தொலைக்காட்சிகளில் வருவது ‘செய்திகள் வாசிப்பவர்’ என்று மாற்றப்பட வேண்டும், அருள்திரு போன்ற சொற்களுக்குப் பதிலாக ‘தமிழ்திரு’ போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும், ‘பண்டாரகர்’ என்ற சொல் ‘முனைவர்’ என்று மாற்றப்பட வேண்டும், தமிழில் வீதிகளின் பெயர்ப் பலகைகள் இருக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்து அவற்றுள் சிலவற்றை நிறைவேற்றியும் காட்டினார். பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகள் தமிழ் மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும், தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்துக்காக முனைவர் பா. இறையரசன் அவர்களால் வைக்கப்பட்டன. இதற்கென பெரிய அளவில் ஊர்வலமும், உண்ணா நோன்பும் நடத்தியதாகக் குறிப்பிடுகிறார்.
தமிழ் மொழியின் சிறப்பை அறியாமல் தாரை வார்த்து கொண்டிருக்கும் மக்கள் வாழும் தரணியில் தரமான செயல்களைச் செய்து தனித்துவத்துடன் திகழும் தகைமைசால் தமிழறிஞர் முனைவர் பா. இறையரசன் அவர்களின் முயற்சிகளும், கனவுகளும் வெற்றிபெற வாழ்த்துக்கள்…..
|
||||||||
by Lakshmi G on 16 Apr 2021 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|