|
|||||
பூனையும், அதன் நிழலும் |
|||||
முட்டாள் பூனை ஒன்று, ஒரு வீட்டில் இருந்து, பெரிய கருவாட்டு துண்டை திருடியது. அதனை வாயில் பத்திரமாக கவ்விக்கொண்டு தன் வீட்டிற்கு புறப்பட்டது. செல்லும் வழியில் சில பூனைக்குட்டிகள் அந்த முட்டாள் பூனையிடம், “கருவாட்டுதுண்டை தறுமாறு” கேட்டன. ஆனால் அந்த முட்டாள் பூனையோ “இதை நான் யாருக்கும் தரமாட்டேன். இதை முழுவதுமாக நான் மட்டுமே சாப்பிட போகிறேன்”, என்று கூறி விட்டுச்சென்றது. செல்லும் வழியில் அந்த முட்டாள் பூனை ஒரு பாலத்தை கடக்க வேண்டியிருந்தது. பூனை பாலத்தைக் கடக்கும் போது கீழே தண்ணீரைப் பார்த்தது. அந்தத் தண்ணீரில் அதன் உருவம் தெரிந்தது. தண்ணீரில் தெரிந்த அதன் உருவத்திலும் வாயில் கருவாட்டு துண்டு இருந்தது. அதைக் கண்ட பூனை “இந்த பூனையிடம் ஒரு பெரிய கருவாட்டு துண்டு உள்ளது. இதையும் அபகரித்துவிட வேண்டும்” என்று நினைத்தது. உடனே அது பலமாக "மியாவ், மியாவ்" எனக் கத்திக் கொண்டே தண்ணீரில் தெரிந்த பூனையின் மீது பாய்ந்தது. அதனால் அதன் வாயில் இருந்த கருவாட்டுதுண்டும் தண்ணீரில் விழுந்தது. தண்ணீரில் விழுந்தவுடன் தான் அந்த முட்டாள் பூனைக்கு புரிந்தது இது நிழல் பிம்பம் என்று. பெரிய கருவாட்டு துண்டை தேடிச் சென்ற பூனை தண்ணீரில் தத்தளித்தது. மிகவும் துன்பத்துடன் உயிரக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என கரையேறியது அந்த முட்டாள் பூனை. என்ன குட்டீஸ், இந்த கதையில் வரும் முட்டாள் பூனையின் கதாபாத்திரம் நமக்கு விளக்குவது என்னவென்றால், எந்தவொரு, விசயத்திலும் நாம் பேராசை கொண்டால், பெரு நஷ்டம் உண்டாகும் என்பதுதான். |
|||||
by Swathi on 19 Mar 2014 1 Comments | |||||
Tags: பூனை கதைகள் Cat Stories | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|