தேவையானவை :
உளுந்து - 1கப்பு இஞ்சி - சிறிது கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - 1 பெரியது உப்பு - தேவைகேற்ப மிளகாய் - 1 எண்ணெய்- பொரிக்க
செய்முறை :
1.உளுந்தை 2மணிநேரம் ஊரவைத்து கிரைண்டரில் உப்பு போட்டு மைபோல அரைத்து கொள்ளவும்.
2.வெங்காயம் இஞ்சி, மிளகாய் இவற்றை பொடியா நறுக்கி கொள்ளவும் அரைத்த உளுந்து மாவில் அரிசிமாவு,கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய அனைத்த்தையும் போட்டு கலந்து கொள்ளவும்.
3.அடுப்பில் இரும்பு சட்டி வைத்து அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு காய விடவும்.
4.எண்ணெய் காய்ந்ததும், கலந்து வைத்த மாவு கலவையை ஒரு பிளாஸ்டிக் பேப்பரி சிறிது தண்ணீர் தொட்டு உளுந்த வடை மாதிரி தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான உளுந்த வடை தயார், தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
|