தமிழ் புலவர் ஒட்டக்கூத்தர் முக்தியடைந்த தலம் இது. இவர் இத்தலத்தில்தான் தக்கயாகப்பரணி இயற்றினார்.ஒட்டக்கூத்தரின் அதிஷ்டானம் (சமாதி)
வீரபத்திரர் சன்னதிக்கு பின்புறம் இருக்கிறது. இதற்கு மேல் ஒரு லிங்கமும், எதிரில் நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. ஆவணி உத்திராடம்
நட்சத்திரத்தன்று குருபூஜை நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டும் விசேஷ பூஜை செய்கின்றனர். பவுர்ணமி நாட்களில் நெய்விளக்கு ஏற்றி வழிபாடு
நடக்கிறது. வழக்கமாக உக்கிரமாக அருள்பாலிக்கும் வீரபத்திரர் இத்தலத்தில் சாந்தவீரபத்திரராக அருள்பாலிக்கிறார்.ஒட்டக்கூத்தர் வீரபத்திரரை
தரிசித்துவிட்டு, அருகிலிருந்த முளைச்சாளம்மன் சன்னதிக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டார். கூட்டத்தினர் அவருக்காக காத்திருந்தனர்.
நள்ளிரவாகியும் அவர் வெளியே வரவில்லை. கூட்டத்தினரும் அவரை விடுவதாக இல்லை. கலங்கிய ஒட்டக்கூத்தர் அம்பிகையிடம் தன்னை காக்கும்படி
வேண்டினார். அம்பாள் அவருக்கு காட்சி தந்து, ""உனது மானசீக தெய்வமான வீரபத்திரர், தட்ச யாகத்தை வென்றதை பற்றி பரணி பாடு! அவரருளால் நீ
காப்பாற்றப்படுவாய்!'' என்றாள். ஒட்டக்கூத்தரும் "தக்கயாகப்பரணி' பாடினார்.
தமிழ் புலவர் ஒட்டக்கூத்தர் முக்தியடைந்த தலம் இது. இவர் இத்தலத்தில்தான் தக்கயாகப்பரணி இயற்றினார். ஒட்டக்கூத்தரின் அதிஷ்டானம் வீரபத்திரர் சன்னதிக்கு பின்புறம் இருக்கிறது. இதற்கு மேல் ஒரு லிங்கமும், எதிரில் நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. ஆவணி உத்திராடம் நட்சத்திரத்தன்று குருபூஜை நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டும் விசேஷ பூஜை செய்கின்றனர்.
பவுர்ணமி நாட்களில் நெய்விளக்கு ஏற்றி வழிபாடு நடக்கிறது. வழக்கமாக உக்கிரமாக அருள்பாலிக்கும் வீரபத்திரர் இத்தலத்தில் சாந்தவீரபத்திரராக அருள்பாலிக்கிறார். ஒட்டக்கூத்தர் வீரபத்திரரை தரிசித்துவிட்டு, அருகிலிருந்த முளைச்சாளம்மன் சன்னதிக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டார். கூட்டத்தினர் அவருக்காக காத்திருந்தனர். நள்ளிரவாகியும் அவர் வெளியே வரவில்லை.
கூட்டத்தினரும் அவரை விடுவதாக இல்லை. கலங்கிய ஒட்டக்கூத்தர் அம்பிகையிடம் தன்னை காக்கும்படி வேண்டினார். அம்பாள் அவருக்கு காட்சி தந்து, ""உனது மானசீக தெய்வமான வீரபத்திரர், தட்ச யாகத்தை வென்றதை பற்றி பரணி பாடு! அவரருளால் நீ காப்பாற்றப்படுவாய்!'' என்றாள். ஒட்டக்கூத்தரும் "தக்கயாகப்பரணி' பாடினார். |