|
||||||||
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! |
||||||||
மாசி மகம் என்பது மாசி மாதப் பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும்.
மாசி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்று மாசி மகம். பொதுவாக அனைத்து மாதங்களிலும் வரும் பௌர்ணமி நாளும் சிவ பெருமான் மற்றும் முருகப் பெருமானுக்குரிய வழிபாட்டு நாளாகக் கருதப்படுகிறது. இதில் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் பௌர்ணமி மிகவும் விசேஷமானது. இந்த நாட்களில் விரதம் இருந்து, வழிபடுவது மிக உயர்வான புண்ணியப் பலன்களைத் தருவதுடன், பல மடங்கு அதிகப் பலன் தரக்கூடியதாகும்.
மாசியில் எந்தத் தெய்வத்தை வணங்க வேண்டும் ?
மகம் ஜெகம் ஆளும் என்பது பழமொழி. சிம்ம ராசியைச் சேர்ந்த இந்த நட்சத்திரத்தின் ராசி அதிபதி சூரியன் என்பதால், இந்த நட்சத்திரத்திற்கு ஆளுமை தன்மை அதிகம். மகம் என்பது கேதுவின் நட்சத்திரம். மோட்ச காரகன் எனப்படும் கேதுவின் மகம் நட்சத்திரத்தில், சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மாசி மகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீ விஷ்ணு பகவானையும், பித்ருக்களையும் வணங்கினால் சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்க்கையை வாழ்வோம்…
மாசி மகம் 2024 எப்போது?
இந்த ஆண்டு இத்தகைய புண்ணியம் வாய்ந்த மாசி மகப் பெருவிழா பிப்ரவரி 24-ம் தேதி சனிக்கிழமை வருகிறது. பிப்ரவரி 23-ம் தேதி மாலை 04.55 மணிக்குத் தொடங்கி, பிப்ரவரி 25-ம் தேதி மாலை 06.51 வரை பௌர்ணமி திதி உள்ளது. மக நட்சத்திரம் பிப்ரவரி 23-ம் தேதி இரவு 08.40 மணிக்குத் தொடங்கி பிப்ரவரி 24-ம் தேதி இரவு 11.05 வரை மகம் நட்சத்திரமும் உள்ளது.
இதனால் பிப்ரவரி 24-ம் தேதி காலை முதல் மாலை வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் புனித நீராடலாம். புனித நீராட முடியாதவர்கள் வீட்டிலேயே விரதம் இருந்து, சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் மனதார நினைத்து பிரார்த்தனை செய்யலாம். இந்த நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளிப்பதாலும் ஏழு தலைமுறை பாவம் தீரும் என்பது ஐதீகம்..
முன்னோர்கள் வழிபாடு
மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்கள். ஆகையால் அன்றைய தினம் பித்ருக்கள் வழிபாடு செய்ய முன்னோர்களின் ஆசி கிடைக்கும். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும். மேலும் சிவன், விஷ்ணு, முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களைத் தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களைப் போக்கும் என்பது ஐதீகம்.
கும்பகோணம் மாசி மகம் விழா
தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் தெப்பத்தில் மாசி மகத் திருவிழா, மகாமகம் விழாவாக மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். |
||||||||
by Kumar on 15 Feb 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|