LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?

கிளவுட் ப்ரைட்டனிங் என்ற முறையைப் பயன்படுத்துகிறார்களாம். இது மேகங்களைப் பிரகாசமாக்கும் ஒரு முக்கிய தொழில்நுட்பமாகும். உலக வெப்பமயமாதல் பெரும் தலைவலியாக இந்தப் பூமிக்கு உள்ளது. பருவநிலை மாறுபாடு, இயற்கைச் சீற்றங்கள் அதிகரிப்பு ஆகியவற்றுக்கு வெப்பமயமாதலே காரணமாக உள்ளது. கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி புவி வெப்பமயமாதலைக் குறைக்கப் பல்வேறு முயற்சிகள் எடுக்க உலக நாடுகள் திட்டமிட்டுள்ளன. 

 

இது ஒருபக்கம் இருக்கச் சமீப ஆண்டுகளில் புவி வெப்பம் அதிகரித்து வருகிறது. கடந்த 2023 ஆண்டு தான் பூமி அதன் வெப்பமான ஆண்டை பதிவு செய்தது. வரும் காலங்களில் பூமியில் பதிவாகும் வெப்பம் மேலும் மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள். இதனால் பூமியின் வெப்பத்தைக் குறைக்க ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளில் இறங்கி உள்ளனர். பூமியைத் தற்காலிகமாகக் குளிர்விக்கப் புதிய வழி ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் முன்மொழிந்து உள்ளனர். அதாவது சூரியனிலிருந்து வரும் சில கதிர்களை மீண்டும் விண்வெளிக்குத் திருப்பி அனுப்புவதே இந்தத் திட்டமாகும்.

 

இதற்காக அவர்கள் கிளவுட் ப்ரைட்டனிங் என்ற முறையைப் பயன்படுத்துகிறார்களாம். இது மேகங்களைப் பிரகாசமாக்கும் ஒரு முக்கிய தொழில்நுட்பமாகும். இந்த மேகங்கள் சூரிய ஒளியின் ஒரு சிறிய பகுதியை மீண்டும் விண்வெளிக்கே திரும்பி அனுப்பிவிடுமாம். இதன் காரணமாகப் பூமியின் ஒரு பகுதி வெப்பம் கணிசமாகக் குறையும். இந்தத் தொழில்நுட்பம் முழுமையாக வெற்றி அடைந்தால் அது மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

 

கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இது குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சான்பிரான்சிஸ்கோவில் விமானத்திலிருந்து அதிக வேகத்தில் உப்புத் துகள்களை வானத்தில் தூவியிருக்கிறார்கள். அதாவது உள்ளே வரும் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக மேகங்களைப் பயன்படுத்துவதே இதன் நோக்கம். 1990ல் பிரிட்டிஷ் இயற்பியலாளர் ஜான் லாதம் என்பவர் முன்மொழிந்த திட்டத்தை இப்போது இவர்கள் செயல்படுத்துகிறார்கள். இது குறித்த ஆய்வு மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இது வெற்றியடைந்தால் பூமியின் வெப்பத்தை இது கணிசமாகக் குறைக்கும். இருப்பினும், இது நிச்சயம் தற்காலிகமான தீர்வாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர்.

by Kumar   on 07 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கலா மஞ்சரி நிறுவனர் திருமதி சௌந்தர நாயகி வயிரவன் அவர்களின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு வெளியீடு கலா மஞ்சரி நிறுவனர் திருமதி சௌந்தர நாயகி வயிரவன் அவர்களின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு வெளியீடு
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று செயின்ட் லூயிஸ் மேனாள் தமிழ்சங்கத் தலைவர் விஜய் மணிவேல் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றுள்ளனர் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று செயின்ட் லூயிஸ் மேனாள் தமிழ்சங்கத் தலைவர் விஜய் மணிவேல் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றுள்ளனர்
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.