|
|||||
நாமக்கல் மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் போட்டி அறிவிப்பு |
|||||
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகப் பொது மறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பள்ளி மாண வர்கள் இளம்வயதிலேயே அறிந்து கொண்டு, கல்விய றிவோடு நல்லொழுக்கம் மிக்க வர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் "திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத்” திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.
ரொக்கப் பரிசு
1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் மாணவ /மாணவியர்களுக்குத் தலா ரூ.15,000/ (ரூபாய் பதினைந்தாயிரம் மட் டும்) ரொக்கப் பரிசாகத் தமிழ் வளர்ச்சித்துறை யால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. 2023-24 இத்திட்டத்தின்கீழ் போட் டியில் பங்கேற்கும் மாண வர்கள் 1330 குறட்பாக் களையும் ஒப்பிக்கும் திறன்கொண்ட மாணவர் களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், குறள் எண், போன்ற வற்றை தெரிவித்தால் அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்புப்பெயர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.
தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளம்
நாமக்கல் மாவட்டத்தில் 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற மாணவ/மாணவியர் இருப்பின் இப்போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்த போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இப்போட்டியில் கலந்து கொள்ள இயலாது.
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் (https://tamilvalarchithurai.tn.gov.in//)இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தை நிறைவு செய்து 28.12.2023க்குள் நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04286292164 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார். |
|||||
by Kumar on 14 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|