LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

38 தமிழ்ப் பற்றாளர்களுக்கு விருதுகள்

 

2023-ம் ஆண்டுக்கான "தமிழ் அகராதியியல் நாள் விழா" சென்னை, கலைவாணர் அரங்கத்தில் 08-11-2023-ம் தேதி நடைபெற்றது. வீரமாமுனிவர் பிறந்தநாளை முன்னிட்டு 38 தமிழ்ப் பற்றாளர்களுக்கு விருதுகள் - அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
***********************************************
"தமிழ் அகராதியியலின் தந்தை" என்று போற்றப்படும் வீரமாமுனிவரின் தமிழ்த்தொண்டைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 8 ஆம் நாளைத் "தமிழ் அகராதியியல் நாள் விழா"வாகக் கொண்டாட தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, "தமிழ் அகராதியியல் நாள் விழா" கொண்டாடப்பட்டு வருகிறது.
*********************************
அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான "தமிழ் அகராதியியல் நாள் விழா" சென்னை, கலைவாணர் அரங்கத்தில் 08.11.2023 சிறப்புற நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பங்கேற்று, 35 பேருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான "தூயதமிழ்ப் பற்றாளர் விருதும்", தென்மொழி - திங்களிதழ் சார்பாக முனைவர் மா. பூங்குன்றனுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான "தூயதமிழ் ஊடக விருதும்" மரபுக்கவிதை பிரிவில் ப. எழில்வாணன் மற்றும் புதுக்கவிதை பிரிவில் ம. சுடர்த்தமிழ்ச்சோழன் ஆகியோருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான "நற்றமிழ்ப் பாவலர் விருதும்" என மொத்தம் 38 தமிழ்ப் பற்றாளர்களுக்கு விருதுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
************************************
மேலும், 2023-ம் ஆண்டுக்கான "அகராதி ஆய்வு மலர்", "வட்டார வழக்குச் சொற்பொருள் அகராதி", "மருத்துவக் கலைச்சொல் அகராதி", "செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் திருந்திய பதிப்பு (7 தொகுதிகள்), பன்மொழி அகராதியுடன் கூடிய குறுஞ்செயலி ஆகியவற்றை வெளியிட்டுச் சிறப்பித்தார்.
***********************************
இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் இரா. செல்வராஜ், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ந. அருள், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குனர் கோ. விசயராகவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

2023-ம் ஆண்டுக்கான "தமிழ் அகராதியியல் நாள் விழா" சென்னை, கலைவாணர் அரங்கத்தில் 08-11-2023-ம் தேதி நடைபெற்றது. வீரமாமுனிவர் பிறந்தநாளை முன்னிட்டு 38 தமிழ்ப் பற்றாளர்களுக்கு விருதுகள் - அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

தமிழ் அகராதியியலின் தந்தை" என்று போற்றப்படும் வீரமாமுனிவரின் தமிழ்த்தொண்டைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 8 ஆம் நாளைத் "தமிழ் அகராதியியல் நாள் விழா"வாகக் கொண்டாட தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, "தமிழ் அகராதியியல் நாள் விழா" கொண்டாடப்பட்டு வருகிறது.

 

விருதுகளை வழங்கி வாழ்த்து

 

அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான "தமிழ் அகராதியியல் நாள் விழா" சென்னை, கலைவாணர் அரங்கத்தில் 08.11.2023 சிறப்புற நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பங்கேற்று, 35 பேருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான "தூயதமிழ்ப் பற்றாளர் விருதும்", தென்மொழி - திங்களிதழ் சார்பாக முனைவர் மா. பூங்குன்றனுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான "தூயதமிழ் ஊடக விருதும்" மரபுக்கவிதை பிரிவில் ப. எழில்வாணன் மற்றும் புதுக்கவிதை பிரிவில் ம. சுடர்த்தமிழ்ச்சோழன் ஆகியோருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான "நற்றமிழ்ப் பாவலர் விருதும்" என மொத்தம் 38 தமிழ்ப் பற்றாளர்களுக்கு விருதுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

பன்மொழி அகராதியுடன் குறுஞ்செயலி 

மேலும், 2023-ம் ஆண்டுக்கான "அகராதி ஆய்வு மலர்", "வட்டார வழக்குச் சொற்பொருள் அகராதி", "மருத்துவக் கலைச்சொல் அகராதி", "செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் திருந்திய பதிப்பு (7 தொகுதிகள்), பன்மொழி அகராதியுடன் கூடிய குறுஞ்செயலி ஆகியவற்றை வெளியிட்டுச் சிறப்பித்தார்.

இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் இரா. செல்வராஜ், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ந. அருள், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குனர் கோ. விசயராகவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

by Kumar   on 10 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.