LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருவாரூரில் 45.59 நிமிடங்களில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து மூதாட்டி சாதனை

திருவாரூரில் 81 வயது மூதாட்டி 45.59 நிமிடங்களில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

 

திருவாரூர் மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த ஜெயராமன்(91) மனைவி சரஸ்வதி(81). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், யோகா பயிற்சியாளராக உள்ள இவரது 2-வது மருமகள் பிரேமாவிடம்(50) கடந்த 10 ஆண்டுகளாக ஜெயராமன், சரஸ்வதி ஆகியோர் யோகா பயிற்சி பெற்று வருகின்றனர்.

 

 2018-ல் இந்த தம்பதி 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து, லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்பெற்றனர். இந்நிலையில், சரஸ்வதி நேற்று முன்தினம் கீரனூரில் உள்ளவைநிதி சேவாலயா பயிற்சி மையத்தில் 45 நிமிடங்கள் 59 விநாடிகளில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து சாதனை படைத்தார்.

 

விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தச் சாதனை

 

 அவருடன் இணைந்து, இணையம் மூலம் யோகா பயின்று வரும் மாணவ, மாணவிகளும் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்தனர். இந்நிகழ்வை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு சார்பில் ஹைதராபாத்தைச் சேர்ந்த நடுவர் சகாயராஜ் பங்கேற்று, பதிவு செய்தார். தொடர்ந்து, அந்த அமைப்பு சார்பில் சரஸ்வதிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

 

இதுகுறித்து சரஸ்வதி கூறும் போது, "எங்களைச் சுறுசுறுப்பாக வைத்துள்ள யோகாவை முதியோரும், இளைய தலைமுறையினரும் கற்றுக்கொண்டு, உடல் நலத்துடன் வாழ விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தச் சாதனை முயற்சியை மேற்கொண்டேன்" என்றார்.

by Kumar   on 09 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.