LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- உலக நாடுகளில் தமிழர்கள்

கம்போடியாவில் உலகத் திருக்குறள் மாநாடு: நிகழ்ச்சி வெற்றிபெற வாழ்த்துகள்...

அங்கோர் தமிழ்ச் சங்கம் கம்போடியா இரண்டுநாள் நடைபெறும் உலகத் திருக்குறள் மாநாட்டில்  உலகப் பொதுமறை திருக்குறள் தந்த வான்புகழ் வள்ளுவருக்கு கம்போடிய நாட்டில் சிலை நிறுவப்படுகிறது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வான்புகழ் வள்ளுவரால் தமிழில் எழுதப்பட்ட திருக்குறள் இன்றளவும் 20 க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கம்போடியாவில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும்  உலகத் திருக்குறள் மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து திருக்குறள் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேராசிரியர்கள், முனைவர்கள் குறிப்பாகத் தமிழகத்திலிருந்து அரசுத்துறை அலுவலர்கள் அமைச்சர் பெருமக்கள் என பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். கம்போடியா நாட்டின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை, வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம், பன்னாட்டுத்தமிழர் நடுவம், அங்கோர் தமிழ்ச்சங்கம் மற்றும் சீனு ஞானம் டிராவல்ஸ் இணைந்து இவ்விழாவினைச் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். 

விழாவில்….

திருவள்ளுவர் சிலை திறப்பு, கெமர் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு, கருத்தரங்கம் திருக்குறள் சார்ந்த சொற்பொழிவுகள் ஆய்வு நூல்கள் வெளியீடு, அங்கோர் தமிழ்ச்சங்க மலர் வெளியீடு, தமிழ்ச்சான்றோர்களுக்கு கம்போடிய அரசு விருதுகள் இரண்டு நாள் சுற்றுலா…..என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் விழா குறித்த விரிவான செய்திகளும் மாநாட்டில் பங்கேற்பாளர்களுக்கான வழிகாட்டுதல்களும் தொடரும்... அனைவரும் வருக!!! அங்கோர் தமிழ்ச் சங்கம்,கம்போடியா Email: angkorthamilsangam@gmail.com.

 

by Swathi   on 20 Jan 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துடன், கலாமஞ்சரி ஒப்பந்தம் செய்துகொண்டது. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துடன், கலாமஞ்சரி ஒப்பந்தம் செய்துகொண்டது.
அமெரிக்காவில் முதன்முறையாகத் தமிழ் மரபுக்கலைகள், மரபு விளையாட்டுக்களுடன் கோடைக்கால முகாம் அமெரிக்காவில் முதன்முறையாகத் தமிழ் மரபுக்கலைகள், மரபு விளையாட்டுக்களுடன் கோடைக்கால முகாம்
வாசிங்டன் முருகன் கோவிலில் இலங்கை நல்லூர் முருகன் தேர்த்திருவிழா வாசிங்டன் முருகன் கோவிலில் இலங்கை நல்லூர் முருகன் தேர்த்திருவிழா
“தமிழ் அறிவு வளாகம்” அமைக்க அமெரிக்காவில்  நிதி திரட்டும் கருத்தரங்கங்கள் “தமிழ் அறிவு வளாகம்” அமைக்க அமெரிக்காவில் நிதி திரட்டும் கருத்தரங்கங்கள்
அமெரிக்காவில் தமிழ் மரபிசைக்குழு - “கொம்பு நிகழ்த்து கலைகள் மற்றும் ஆராய்ச்சி மையம்” அமெரிக்காவில் தமிழ் மரபிசைக்குழு - “கொம்பு நிகழ்த்து கலைகள் மற்றும் ஆராய்ச்சி மையம்”
கலா மஞ்சரி நிறுவனர் திருமதி சௌந்தர நாயகி வயிரவன் அவர்களின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு வெளியீடு கலா மஞ்சரி நிறுவனர் திருமதி சௌந்தர நாயகி வயிரவன் அவர்களின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு வெளியீடு
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று செயின்ட் லூயிஸ் மேனாள் தமிழ்சங்கத் தலைவர் விஜய் மணிவேல் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றுள்ளனர் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று செயின்ட் லூயிஸ் மேனாள் தமிழ்சங்கத் தலைவர் விஜய் மணிவேல் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றுள்ளனர்
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.