|
|
நலம் காக்கும் சித்த மருத்துவம் : அஞ்சனம் – கண்மை இடல் – 27 |
அஞ்சனம் – கண்மை இடல்
அழகினைக் கூட்டி உடலினைப் பாதுகாக்கும் தமிழர்களின் பல பழக்க வழக்கங்களுள் கண்மையிடுதலும் ஒன்று.
மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண் மையிடுதல் வேண்டும் என சித்தர் நூல்கள் கூறுகின்றன.
கண்மை யிடும் பழக்கம் அக்காலத்தில் ஆண்களுக்கும் இருந்தது. இக்காலத்திலோ சில பெண்களே கண்மை இடுவதில்லை. கண்மையிடும் சில பெண்களும் சந்தையில் கிடைக்கும் வேதிப் பொருட்களிலான கருப்பு மையினை கண்களில் இட்டுக் கொள்கின்றனர். இதனால் நன்மைகள் ஏற்படாது. மாறாக ஒவ்வாத வேதிப் பொருட்களால் உடலில் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளன. சந்தைகளில் கிடைக்கும் கண்மை போன்ற ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் எந்தத் தீங்கும் விளையாது என விளம்பரப் படுத்தும் நிறுவனங்களே அந்த ஒப்பனையை முழுமையாக நீக்கிவிடக்கூடிய உபாயங்களையும் கூறுகின்றன. ஒப்பனைக்காக சந்தைகளில் கிடைக்கும் பெரும்பாலான பொருட்கள் பெரும் தீங்கினை விளைவிக்கக்கூடிய வேதிப் பொருட்களால் ஆனவையே.
இயற்கையான மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ஏராளமான கண் மைகள் அக்காலத்தில் பழக்கத்தில் இருந்தன. அவற்றில் எளிதாகத் தயாரிக்கும் ஒரே ஒரு முறையினை மட்டும் இப்போது பார்க்கலாம்.
கரிசாலைக் கண்மை தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
1. வெள்ளைக் கரிசாலை இலைச் சாறு
2. விளக் கெண்ணெய்
3. மண் அகல் விளக்கு
4. பருத்தித் துணி
5. கற்றாைழச் சாறு
|
வெள்ளைக் கரிசாலைச் சாற்றில் 2 அங்குலம் அளவுள்ள சதுர பருத்தித் துணிகளை மூழ்க வைக்க வேண்டும். நன்றாக ஊறிய பின்பாக அவற்றை நிழலில் உலர வைக்க வேண்டும். பின்பு மீண்டும் முன்பு போலவே புதிய கரிசாலைச் சாற்றில் மூழ்கவைத்து உலர வைக்க வேண்டும். இது போல 4 முறை செய்து கொள்ள வேண்டும்.
இந்தத் துணியினை திரியாகச் சுருட்டி ஒரு மண் அகலில் போட்டு விளக் கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
மற்றொரு அகலமான மண் சட்டியில் உட்புறமாகக் கற்றாைழச் சாறு தடவி மேலே கூறிய விளக்கின் மீது கவிழ்த்து வைக்க வேண்டும். காற்றுப் போக சிறிது வழிவிட வேண்டும். விளக்கின் இருபுறமும் சிறிய கல் அல்லது கட்டை போட்டு அதன் மீது மண்சட்டியை வைத்தால் காற்றும் சென்று வரும். விளக்கும் அணையாமல் எரியும். அப்போது விளக்கிலிருந்து வரும் புகை பானையின் உட்புறத்தில் நுண் கருந்துகள்களாகப் படியும். விளக்கு முழுவதும் எரிந்து முடிந்த பின்பு அந்த புகைக் கரியை சேகரித்துக் கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் இது போல எரிய விட்டு நுண்கரித்துகள்களை சேகரித்துக் கொண்டு விளக் கெண்ணெயுடன் அதனைக் கலந்து உறவாகும்படி அரைத்துக் கொள்ள வேண்டும். இதுவே இயற்கையான கண்மை.
இதனை ஆண்களும், பெண்களும், சிறுவர் சிறுமிகளும் பச்சிளம் குழந்தைகளும் கண்மையாகத் தீட்டிக் கொள்ளலாம்.
சில குறிப்புகள்
1. பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான குமிழ்களில் சேமித்துக் கொள்ள வேண்டும். ஒரே குமிழில் உள்ள மையைப் பலரும் பயன்படுத்தக் கூடாது.
2. கண்ணிர்க்குள்ளிடும் ஆடிகளை (Contact lens) பயன்படுத்துவோர் அதனை நீக்கிய பின்பு கண்மை இட்டுக் கொள்ளலாம்.
3. பெண்கள் மாதவிடாய் காலத்தில் கண்மை இடக்கூடாது.
4. கண்களில் ஏதேனும் தோற்று நோய் இருக்கும் போது இதனை பயன்படுத்த வேண்டாம். அது நீங்கிய பின் அடிக்கடி பயன்படுத்துவதால் நன்மைகள் உண்டாகும். ( பின்பு விளக்கப்படுகின்றது )
5. கண்மை தயாரித்து ஒரு ஆண்டு வரை பயன்படுத்தலாம்.
6. கண்மை இட்டு வெளியே சென்று வந்த பின்பு அதனை கழுவி நீக்க வேண்டிய அவசியமில்லை.
7. தூய கை விரல்களைக் கொண்டே கண்மையிடலாம். இல்லாவிடில் தாமிர, வெள்ளிக் குச்சிகளை சிறப்பான முறையில் வடிவமைத்தும் பயன்படுத்தலாம்.
நன்மைகள்
1. சிறந்த கண் அழகு மட்டுமல்லாமல் முக அழகினையும் கொடுக்கும்.
2. கற்றாைழ, கரிசாலை, விளக் கெண்ணையில் உள்ள நுட்பமான தாவர வேதிப் பொருட்கள் (Phyto chemicals) கண்மையில் கலந்திருக்கும். அவை மிகவும் நுண்ணிய துகள்களாக (Nano particles) கண்களின் இமைகளுக்கு உள்ளேயுள்ள நுண் இரத்தக் குழாய்கள் (Capillaries) வழியாக உறிஞ்சப்பட்டு ( உட்கிரகிக்கப்பட்டு ) மிகவும் நுட்பமான் முறையில் கண்களைப் பாதுகாக்கும். கண் விழித்திரையை (Retina) பலப்படுத்தும். கண் அசைவிற்கான தசைகளை சீராக இயங்கச் செய்யும். கண் எப்போதும் குளிர்ச்சியாகவும் நெயப்புத் தன்மையோடும் இருக்கச் செய்யும். கண் பார்வை நரம்புகளைப் பலப் படுத்தும்.
3. நீரிழிவு நோய் (Diabetes), இரத்தக் கொதிப்பு (Hypertension) உள்ளவர்கள் வாரம் இருமுறை இரவில் மட்டும் போட்டு உறங்குவதால் பார்வை நரம்பு, விழித்திரை பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். கண்புரை (Cataract) போன்ற பல நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல் கண்களுக்குக் கிடைக்கும்.
4. கண்மையிலுள்ள நுண் பொருட்கள் கண் இமையினால் உறிஞ்சப்பட்டு கண்களைப் பாதுகாப்பதோடு மட்டுமின்றி அவை மூளைக்கும் சென்று மூளை நரம்பு வேதிப் பொருட்களின் (Neurotransmitters) செயல்பாடுகளையும் சீராக்குவதால் மன அமைதி, தெளிவான சிந்தனை, கனிவு, அன்பு போன்றவை ஏற்பட வழிவகுக்கின்றது.
இது போன்ற ஏராளமான நன்மைகள் கண்மையினால் உண்டாகும். வேறு சில பாதுகாப்பு முறைகளை அடுத்த வாரம் பார்க்கலாம்.
நலப்பயணம் தொடரும்.............. |
|
|
|
|
|
by Swathi on 16 Mar 2015 0 Comments |
Tags:
சித்த மருத்துவம்
Siddha Maruthuvam
Kan Mai
கண் மை
கரிசாலைக் கண்மை
கண்மை இடல்
அஞ்சனம்
|
Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. |
|