LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ் மொழி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது

 

தமிழ் மொழி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறிய ஐகோர்ட் கிளை, எழுத்து சீர்திருத்தம் கோரிய மனுவை முடித்து வைத்தது.
*********************************
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த அபிமானி (எ) சந்திரசேகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த வமனுவில், "தமிழ் எழுத்துக்களில் பல்வேறு காலகட்டங்களில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
****************************************
ஆனால், இதுவரை முழுமையாக சீர்திருத்தம் செய்யவில்லை. உயிர்மெய் எழுத்துக்களான 216 எழுத் துக்களில் 180 எழுத்துக்கள் அனைத்து தரப்பினரும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. 'உ' மற்றும் 'ஊ' வரிசை யிலுள்ள 36 எழுத்துக்கள் சற்று கடினமாக உள்ளன.
************************************
எனவே, இந்த 36 எழுத்துக்களையும் அனைத்து தரப்பினரும் சுலபமாக அறிந்து கொள்ளவும், பேசவும், எழுதும் வகையிலும் எழுத்து சீர்திருத்தம் செய்திடும் வகையில் உயர் வல்லுநர் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
******************************
சிங்கப்பூரில் தமிழே, தேசிய மொழி
**********************************
இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷா பானு ஆகியோர், "பல்வேறு வெளிநாடுகளில் குறிப்பாக சிங்கப்பூர் நாட்டில் இந்திய மொழியான தமிழே, தேசிய மொழியாக அங்கீகாரிக்கப்பட்டுள்ளது. பழ மையானதும், தொன்மை யானதுமான மொழியான தமிழ் மொழிதொடர்பான இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.
****************************
இதுபோன்ற மனுக்கள், நீதி மன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் உள்ளது. எனவே, எதிர்காலங்களில் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும்'' எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.

தமிழ் மொழி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறிய ஐகோர்ட் கிளை, எழுத்து சீர்திருத்தம் கோரிய மனுவை முடித்து வைத்தது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த அபிமானி (எ) சந்திரசேகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த வமனுவில், "தமிழ் எழுத்துக்களில் பல்வேறு காலகட்டங்களில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

ஆனால், இதுவரை முழுமையாக சீர்திருத்தம் செய்யவில்லை. உயிர்மெய் எழுத்துக்களான 216 எழுத் துக்களில் 180 எழுத்துக்கள் அனைத்து தரப்பினரும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. 'உ' மற்றும் 'ஊ' வரிசை யிலுள்ள 36 எழுத்துக்கள் சற்று கடினமாக உள்ளன.

எனவே, இந்த 36 எழுத்துக்களையும் அனைத்து தரப்பினரும் சுலபமாக அறிந்து கொள்ளவும், பேசவும், எழுதும் வகையிலும் எழுத்து சீர்திருத்தம் செய்திடும் வகையில் உயர் வல்லுநர் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

சிங்கப்பூரில் தமிழே, தேசிய மொழி

இந்த மனுவை 2023 அக்டோபர் 27-ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷா பானு ஆகியோர், "பல்வேறு வெளிநாடுகளில் குறிப்பாக சிங்கப்பூர் நாட்டில் இந்திய மொழியான தமிழே, தேசிய மொழியாக அங்கீகாரிக்கப்பட்டுள்ளது. பழ மையானதும், தொன்மை யானதுமான மொழியான தமிழ் மொழிதொடர்பான இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.

இதுபோன்ற மனுக்கள், நீதி மன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் உள்ளது. எனவே, எதிர்காலங்களில் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும்'' எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.

 

by Kumar   on 31 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.