LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ்நாட்டில் முதல் பெண்ணாக செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலி.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சதுரங்க வீராங்கனை வைஷாலி தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

 

செஸ் வீரர்கள் ஒவ்வொருவரின் மிகப் பெரிய கனவு என்பது கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதுதான். ஆனால், சர்வதேச செஸ் அரங்கை பொருத்தவரை ஆண்கள் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதை விட பெண் வீராங்கனைகள் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில், பெண் செஸ் வீராங்கனைகள் இதுவரை 41 நபர்கள் மட்டுமே பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

 

தமிழகத்தில் முதல் பெண் வீராங்கனை

 

இந்நிலையில்தான், தமிழக வீராங்கனை வைஷாலி செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார்.

 

இதன்மூலம் இந்தியாவில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறும் மூன்றாவது பெண் வீராங்கனையும், தமிழகத்தில் முதல் பெண் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

 

இரண்டாயிரத்து 500 புள்ளிகளைக் கடந்து

 

செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான மூன்று தகுதிகளைப் வைஷாலி பெற்றிருந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபன் தொடரில் 2 வெற்றிகளைப் பதிவு செய்ததன் மூலம் 2,501.05 புள்ளிகளை வைஷாலி கடந்தார். கிளாசிக் செஸ் போட்டியில் இரண்டாயிரத்து 500 புள்ளிகளைக் கடந்து கிராண்ட் மாஸ்டராக வளர்ந்துள்ளார். இந்தியாவின் கோனேரு ஹம்பி, ஹரிகா ஆகியோரைத் தொடர்ந்து இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட் மாஸ்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. வைஷாலி பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து 

 

முதல்வர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவின் மூன்றாம் பெண் கிராண்ட் மாஸ்டர் ஆகவும், தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆகவும் உயர்ந்துள்ள வைஷாலிக்கு எனது பாராட்டுகள்!

 

2023-ஆம் ஆண்டு உங்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. உங்கள் தம்பி பிரக்ஞானந்தாவுடன் இணைந்து கேண்டிடேட்ஸ் தொடருக்குத் தகுதி பெற்றதன் மூலம்,அத்தொடருக்குத் தகுதி பெற்ற முதல் உடன்பிறந்தவர்கள் என்ற வரலாற்றைப் படைத்தீர்கள்.

 

பலருக்கும் ஊக்கமாக விளங்குகிறது

 

அதற்கு மேலும் மணிமகுடமாகத் தற்போது நீங்கள் கிராண்ட்மாஸ்டர் ஆகி, முதல்முறையாக உடன்பிறந்தோர் இருவர் கிராண்ட்மாஸ்டராக இருக்கும் லசாதனையைப் படைத்துள்ளீர்கள். 

 

உங்கள் சாதனைகளால் நாங்கள் மிகவும் பெருமைகொள்கிறோம். உங்களது தனிச்சிறப்பான பயணம் செஸ் ஆர்வம் கொண்ட பலருக்கும் ஊக்கமாக விளங்குகிறது. 

 

நமது தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்துக்கான அடையாளமாகத் திகழ்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

by Kumar   on 03 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.