இந்தியாவின் வடமேற்கு பகுதியில் உயர்ந்த மலைப் பாங்கான இடங்களில் அதிக அளவில் திராட்சை உற்பத்தியாகிறது. திராட்சையில் பதினாறு வகைகள் உள்ளது.
அங்கூர் திராட்சை :
அங்கூர் திராட்சை என்பது பசுவின் பால் மடிக்காம்பு போன்று நீளமாக விதையுடன் கூடியது, சிறிதாக விதையின்றி அமைந்துள்ளதை AvIv திராட்சை என்றும் கூறுவர்.
எந்த திராட்சை நல்லது ?
தோல் மெல்லியதாகவும், நல்ல சதைப் பற்றுடன், சிறிய விதைகள் உள்ளதுமான திராட்சையே சிறந்தது. அதில் புளிக்கும் இனத்தவை சிறந்ததல்ல. பெரும்பாலும் இவை உலர்ந்தும், சில சமயங்களில் பசுமையாகவும் விற்கப்படுகின்றன.
திராட்சையின் குணநலன்கள் :
திராட்சை இனிப்பு, குளிர்ச்சி, நெய்ப்புத் தன்மை பொருந்தியது. மற்ற பழங்களைப் போலில்லாமல் இது சீக்கிரம் ஜீரணம் ஆகும் தன்மை கொண்டது.
திராட்சையின் பயன்கள் :
திராட்சை ஜீரண சக்தி அதிகமாவதுடன் நன்கு பக்குவமடையாமல் ஆங்காங்கு தேங்கிநிற்கும் கழிவுப்பொருள்களை உறைந்த நெய்யை உருக்குவது போல் இளக்கியும், பக்குவப்படுத்தியும், அவைகளை வெளியேற்றவும் உதவுகின்றது. இதனால் வயிறு பஞ்சு போன்று மிருதுவாகவும், ரத்தம் சுத்தமாகவும் ஆகின்றன.கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளுக்கு இது வலுவைக் கொடுத்து அவை திறம்பட செயலாற்ற உதவுகின்றது.
கீழ் அல்லது மேல் நோக்கிச் செல்ல வேண்டிய வாயு, சிறுநீர், மலம் போன்ற கழிவுப் பொருள்களும் உள்ளுறுப்புகளில், ஊடுருவிச் செல்லும் பொருள்களும் ஏதேனும் கோளாறு காரணமாக வழிதப்பிச் செல்லுவதாலோ அல்லது செல்லும் வழியறியாது தேங்கி நிற்குமிடத்தோ திராட்சையை உபயோகிக்க அது அவற்றின் தடையை நீக்கிக் அதனதன் இயற்கை வழியே செல்ல மிகவும் உதவுகிறது.
நோயால் நலிந்தவர், சிறு குழந்தைகள், பெரியவர்கள் எல்லோருக்குமே சக்தியை தரக்கூடிய சிறந்த பழமாகும். அதன் பழரஸம், திராட்சை கஷாயம், போன்றவற்றைப் பருகியவுடன் ஓர் புத்துணர்ச்சியைக் கொடுக்கின்றது. இதன் குளிர்ச்சி, நெய்ப்புத் தன்மை போன்ற குணங்களால் தண்ணீர் தாகம், அங்கங்கள் எரிதல், பித்தக் கோளாறுகள், தலைசுற்றல், மயக்கம், வாய் மூக்கு போன்ற துவாரங்கள் வழியே ரத்தம் பெருக்கெடுக்கும் ரத்தபித்தம் என்னும் நோய், சோகை போன்ற உஷ்ண சம்பந்தமான கோளாறுகள் குறைகின்றன.
நெய்யில் பொரித்த திராட்சையைச் சூடாக சாப்பிட்டால் முரட்டு இருமல் கூட சரியாகிவிடும்.
இதயம் அதிகமாக துடிப்பதை குறைக்க :
இதய பலவீனத்தால் படபடப்பு, இதயம் அதிகமாகத் துடிப்பது போன்ற நிலையில் பன்னீரில் சுமார் 40 திராட்சைகளை ஊற வைத்துப் பிரிந்து வடிகட்டிய ரஸத்தைப் பருகுவதால் இதய துடிப்பு சீராகும்.
நீரிழிவு,கல்லடைப்பு குறைய :
100 மி.லி தண்ணீரில் 35 கிராம் திராட்சையை ஊறவைத்து கசக்கிப் பிழிந்து அதனுடன் சம அளவு பசுவின் பால் கலந்து பருக நீரழிவு, சிறுநீர் அதிகமாகப் போகுதல், கல்லடைப்பு, விரை விக்கம் போன்ற நோய்கள் குறைகின்றன.
|
Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. |