தமிழகத்தில் காலியாக உள்ள உதவி விவசாய அதிகாரி காலிப்பணியிடங்களுக்கு, தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : உதவி விவசாய அதிகாரி (Assistant Agriculture Officer)
வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : ப்ளஸ்டூவிற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது காந்திகிராமப் பல்கலைக் கழகத்தின்அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் மூலமாகவோ அல்லது கமிஷனர் ஆப் அக்ரிகல்சரின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்வி நிறுவனத்தின் மூலமாகவோ இரண்டு வருட டிப்ளமோ படிப்பை விவசாயத்துறையில் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் தமிழ் மொழியறிவு கட்டாயம் தேவைப்படும்.
தேர்ச்சி முறை : இரண்டு கட்டமாக தேர்ச்சி முறை இருக்கும். முதலில் எழுத்துத் தேர்வையும், இதன் தொடர்ச்சியாக வாய்மொழித் தேர்வையும் எதிர்கொள்ள வேண்டும். இரண்டு தேர்வுகளின் கூட்டு மதிப்பெண் அடிப்படையில் இறுதித் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகுதி காணும் தேர்வு வரும் 18.04.2015 அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.150-ஐ இந்தப் பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். ஏற்கெனவே கட்டண விலக்கு பெற்றவர்கள் விண்ணப்பத்திற்கு மட்டும் ரூ.50 செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.02.2015
கூடுதல் தகவல் பெற : http://www.tnpsc.gov.in/notifications/1_2015_not_eng_asst_agrl_Officer.pdf என்ற இணைய முகவரியை பார்க்கவும்.
|