|
||||||||
கோடையின் ஆணவச் சிரிப்பு! - இல.பிரகாசம் |
||||||||
காலைக் கதிரவன் கடுகியே வந்தான்
காவிரி நீரை நிரம்பக் குடித்தான்
ஆற்று நீரும் நிரம்ப வற்றிற்று
ஆற்று மணலும் தகதகவென மின்னிற்று
பாம்பும் அங்கே ஊர்ந்தது -அதன்
உடலும் கருகிப் போனது!
தார் சாலை யெங்கும் கானல்நீர்
தளும்ப தகித்து ஓடிற்று!- கொடிய
தாகம் தீர்க்க கருநா யொன்று
தகித்த கானல் நீரைத் தேடிப்-பல
தூரம் தன்நாக்கை நீட்டிக் கொண்டு
தளர்ந்த நடை நடந்தது!
நாவும் வறண்டு போயிற்று –உடல்
நன்றாய் களைத்து மயங்கியது
சாலை யெங்கும் நாற்றம் வீசியது
சந்தன தென்றல் காற்றென
சூரியன் மணம் முகர்ந்தது
ஆணவச் சிரிப்பும் சிரித்தது!
-இல.பிரகாசம்.
காலைக் கதிரவன் கடுகியே வந்தான் காவிரி நீரை நிரம்பக் குடித்தான் ஆற்று நீரும் நிரம்ப வற்றிற்று ஆற்று மணலும் தகதகவென மின்னிற்று பாம்பும் அங்கே ஊர்ந்தது -அதன் உடலும் கருகிப் போனது!
தார் சாலை யெங்கும் கானல்நீர் தளும்ப தகித்து ஓடிற்று!- கொடிய தாகம் தீர்க்க கருநா யொன்று தகித்த கானல் நீரைத் தேடிப்-பல தூரம் தன்நாக்கை நீட்டிக் கொண்டு தளர்ந்த நடை நடந்தது! நாவும் வறண்டு போயிற்று –உடல் நன்றாய் களைத்து மயங்கியது சாலை யெங்கும் நாற்றம் வீசியது சந்தன தென்றல் காற்றென சூரியன் மணம் முகர்ந்தது ஆணவச் சிரிப்பும் சிரித்தது! -இல.பிரகாசம் |
||||||||
by Swathi on 26 Mar 2016 1 Comments | ||||||||
Tags: Kodai Kodai Sirippu Kodai Vizha கோடை கோடை சிரிப்பு கோடை சிரிப்பு | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|