மரத்தாலான நீண்ட கட்டைகளைக் காலில் கட்டிக்கொண்டு ஆடும் ஆட்டம் ஆகும். காலில் கட்டும் கட்டை, கொக்கு என்ற பறவையின் நீண்ட கால்களைப் போல் இருப்பதாலும், இந்தக் கால்கள் மரக்கட்டையால் ஆனதாலும் இது கொக்குக்கால் கட்டை ஆட்டம் என வழங்கப்பட்டு வந்தது . பின்னர் இதே பேச்சுவழக்கில் கொக்கலிக்கட்டை ஆட்டம் என மறுவியுள்ளது. இக்கலை வேலூர், வாலாஜாப்பேட்டை ஆகிய ஊர்களில் மட்டுமே இருந்து வந்தது. இந்நாளில் இக்கலையானது சென்னை, தில்லி போன்ற பெரிய நகரங்களிலும், சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களிலும் நடைபெற்றுள்ளது. இன்றைய நிலையில் இக்கலையானது கோவில் விழாக்கள் மட்டுமல்லாமல் வேறு பல இடங்களிலும் நடந்து வருவதை காண முடிகிறது.
|