|
|||||
நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் பூசுவதன் மருத்துவ பயன்கள் ! |
|||||
விஞ்ஞான வளர்ச்சியால் இன்றைய தலைமுறை பெண்கள் பெரும்பாலும் சந்தானம், குங்குமம், மஞ்சள், விபூதி வைப்பதற்கு பதிலாக, ஸ்டிக்கர் பொட்டுகளையும், டாடு போன்றவைகளையும் வைக்கிறார்கள். இவற்றினால் உடலுக்கு நன்மை ஏற்படுகிறதோ, இல்லையோ, ஆனால் தீமை கண்டிப்பாக ஏற்படுகிறது. ஏனெனில் ஸ்டிக்கர் பொட்டுகளில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதையும் தடுக்கிறது. இவ்வளவு தீய விளைவுகளை தரக்கூடிய ஸ்டிக்கர் பொட்டுகளுக்கு பதிலாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய விபூதி,சந்தனம், குங்குமம் ஆகியவற்றை பூசுவதன் மருத்துவ பயன்கள் பற்றி இங்கு காண்போம்.
விபூதி பூசுவதன் மகத்துவம் :
தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி பூசுவதன் நோக்கமாகும்.
சந்தனம் பூசுவதன் பயன்கள் :
நமது உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலான நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. எனவே நெற்றிப் பகுதி எப்போதும் சூடாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து காய்ச்சலின் தன்மையை அறிகிறோம். எனவே தான் நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதற்காக நாம் நெற்றியில் சந்தனம் பூசுகிறோம்.
மஞ்சள், குங்குமம் பூசுவதன் பயன்கள் :
விபூதி, மஞ்சள், சந்தனம், குங்குமம் ஆகியவை மிக சிறந்த கிருமி நாசினிகள், எனவே இவைகளை பூசுவதால் நமது நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் ஏற்படும் கிருமித் தொற்றுகள் அளிக்கப்படுகிறது. |
|||||
by Swathi on 15 Apr 2013 0 Comments | |||||
Tags: குங்குமம் சந்தனம் விபூதி நெற்றி மஞ்சள் Vibhuthi Kunkumam | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|