ஒரு பெரிய மலை. அந்த மலையில எங்கு பாத்தாலும் காடு. பார்ப்பதற்கு அவ்வளவு ஆழகாக இருக்கும். யாரோ ஒருவர் பச்சை நிற பட்டுப்புடவையை மலைக்குச் சுத்தி விட்டது போல் இருக்கும்.. புடவையில் பூக்கள் இருக்கும் இல்லையா? அதுபோல் மலையில் சிறு சிறு சோலைகள் இருந்தது.
வெள்ளி நூல் போல் அருவி ஒழுகி கொண்டிருந்தது. ஓடைகள் சலசலத்து ஓடி கொண்டிருந்தது. பக்கத்தில் சிறுசிறு குட்டைகள். குட்டைகளில் தாமரைப் பூக்கள். பூத்துக்குலுங்குற தாமரைப்பூக்கள் காற்றிலே அப்படியும் இப்படியும் ஆடி கொண்டிருந்தது . அதைப் பார்த்தால். தேன்குடிக்கத் வண்டுகளை அழைப்பது போல் நமக்குத் தோன்றும்.
அந்த மலைதான் பச்சை மலை. அந்தப் பச்சை மலையில் இரண்டு பேரு இருந்தாங்க.. ரொம்ப நெருங்கின நண்பர்கள். அவங்க யார் யார் தெரியுமா? ஒருத்தர் ரொம்ப ஆழகானவரு. பச்சைமலையோட அழகு ராணி. ஆமாம் அவர்தான் நம்ம மயிலு.
இன்னொருவர் யார் தெரியுமா? ஆமை. ஆமை எப்படி மயிலுக்கு நண்பரானார்ணு நினைக்கிறீங்களா?
"ஓவ்வொருவருத்தருக்கும் அவரவருக்கே உள்ள அழகுண்டு.'' ஆமை இப்படிச் சொல்லும். இதுதான் ஆமையின் அழகு. இரண்டு பேரும் எப்படி நண்பர்கள் ஆனார்கள் என்பது தனிக் கதை.
மயில் அழகு ராணியாச்சே? தன்னோட ஆழகை எப்போதும் பார்த்துக்கிட்டே இருக்கணும்ணு நினைக்கும்? அதுக்கு பச்சை மலையில் கண்ணாடி இருக்கும் என்று நினைக்கிறீர்களா. அதுக்குத்தான் கண்ணாடிக் குளம் இருக்குதே.
மயில் கண்ணாடிக் குளத்திற்கு நாளும் வரும். தெளிந்திருக்கிற தண்ணீரில் தெரியும் தன் ஊருவத்தைப் பாக்க்கும். பாத்துக்கிட்டே இருக்கும். நேரம் போவதே தெரியாமல் பாத்துக்கிட்டே இருக்கும்.
அந்த நேரத்தில் ஆமை அங்கு வரும். அழகைப் பாக்கும் மயிலை ஆமை பார்க்கும். "நீங்கள் ரொம்ப ஆழகாக இருக்கீங்கண்ணு'' மயிலைப் பார்த்து ஆமை சொல்லும்.
மயிலுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். இரண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிக்குவாங்க. அப்படி அவங்க இரண்டு பேரும் நண்பர்கள் ஆயிட்டாங்க. நெருங்கின நண்பர்கள் ஆயிட்டாங்க.
அப்படி இருக்கும் போது....
பச்சை மலைக்கு ஒருத்தன் வந்தான். அவன் ஒரு வேடன். தோளில் பெரிய பை. கையில் பெரிய வலை. கண்ணாடிக் குளத்திற்கு வந்தான். அங்கு வலையை விரித்தான்.
அழகு ராணி மயில் வந்தது. ஓய்யாரமாய் நடந்து வந்தது. வலை விரித்தது தெரியாமல் நடந்து வந்தது. நடந்து வந்த மயில் வலையில் மாட்டிவிட்டது.. அவ்வளவு தான் வேடன் வந்தான். மயிலைப் பிடித்தான். வலையைச் சுருட்டினான். வீட்டுக்குப் புறப்பட்டான்.
அப்போ "ஐயா, ஐயாண்ணு சத்தம் கேட்டது. அது வேறு யாருமல்ல. நம்ம ஆமைதான். ஆமை மயிலோட நண்பனாச்சே? வேடன் நின்றான். திரும்பிப் பாத்தான். ஆமை வேகம் வேகமாக வருவதைப் பார்த்தான். " என்னை ஏன் கூப்பிட்டே?'' அப்படீண்ணு கேட்டான்.
"மயில் என் நெருங்கின நண்பர். அவரை விட்டுவிடுங்க.''
" அதெப்படி? மயிலை விட்டுட்டா அப்புறம் நான் என்ன செய்வேன்?'' வேடன் கேட்டான்.
"' நான் உங்களுக்கு ஒரு பரிசு தருக்கிறேன். பெரிய பரிசு. மயிலை விட்டு விடுங்க '' ஆமை சொல்லியது. வேடன் மயிலை விட்டுவிட்டான். மயில் மகிழ்ச்சியில் நடனம் ஆடியது.
ஆமை தண்ணீரில் மூழ்கியது. கொஞ்ச நேரத்தக்குப் பிறகு மேலே வந்தது அதுகிட்ட ஒரு பொருள் இருந்த்து அது பள பளன்னு மின்னியது. அது ஒரு முத்து.
வெள்ளை நிற முத்து அதை வேடன்னிடம் கொடுத்தது. வேடனுக்குச் மகிழ்ச்சியில் கொஞ்ச தூரம் சென்றவன் திரும்பி வாந்தான்.
"ஆமையே, மயிலை விட்டதுக்கு இது பத்தாது. இன்னொரு முத்து வேணும் என்றான்.''
"இந்த வேடன் பேராசை பிடித்தவன். இவனுக்கு ஒரு பாடம் கற்பிக்கணும்ணு ஆமை நினைத்தது. அது வேடனைப் பார்த்தது . " அதுக்கென்ன, அந்த முத்தை எங்கிட்ட குடுங்க இது மாதிரி இருக்கிற இன்னொரு முத்தை எடுத்து கொண்டுவருகிறேன்.''என்றது. வேடனும் முத்தை ஆமையிடம் கொடுத்தான்.
ஆமை முத்தை வாங்கியது. தண்ணீருக்குள்ளேபோனது. ஆனா அது வெளியே வரவே இல்லை. வேடன் காத்து கொண்டிருந்தான். ரொம்ப நேரம் காத்து கொண்டிருந்தான் .
ஆனால் ஆமை வரவேயில்லை. பேராசைக்கார வேடன் ஏமாந்துபோனான்.
மயிலும் ஆமையும் ஒருத்தரைப் பார்த்து ரகசியமா சிரித்து கொண்டார்கள். மயில் நாளும் கண்ணாடிக் குளத்திற்கு ஓய்யாரமாய் வரும். ஆமை அதுகிட்ட ரொம்ப நேரம் பேசும்.
இரண்டு பேரும் நெருங்கின் நண்பர்களாக வாழ்ந்தாங்க..
|