உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு நேரடி அதிகாரம் வழங்கும் தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
சமூக நல அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இணைச்செயலர் அதற்கு மேலான அதிகாரிகளை விசாரிக்க அரசு அனுமதி தேவையில்லை என்றும், மத்திய அரசின் அனுமதியின்றி அதிகாரிகளை சிபிஐ விசாரிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்த சிறப்பு மிக்க தீர்ப்பு சிபிஐ அமைப்பு தன்னாட்சி அதிகாரத்துடன் சுதந்திரமாக செயல் பட வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
|