திருச்சிராப்பள்ளி, சேலம், பெரியார், கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள கோயில்களில் பொன்னர், சங்கர் ஆகிய சகோதரர்களின் வரலாற்றினை நிகழ்த்திக் காட்டுவதே பொன்னர் சங்கர் விழாக் கூத்தாகும். ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இக்கலை கோயில் சார்ந்த கலையாகும். மக்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ள இக்கூத்து ஆர்மோனியம், மத்தளம், உடுக்கு, கைமணித்தாளம் ஆகிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. கரகம் பாவித்தம், கரகத்தை ஆற்றில் சேர்த்தல் போன்ற நிகழ்ச்சிகளில் உடுக்கு, பறை, கொம்பு, சங்கு, சேண்டி போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
|