|
||||||||
ரயில்! - இல.பிரகாசம் |
||||||||
தேனிரும்பு சுவர் களிரண்டு அதன்மீது நீன்ட நெடிய பெரிய தேறொன்று சுவர்கள் தேயதேய ஒடிடும் தடதட வெனவே குழந்தைகள் போலே மெல்ல மெல்ல தவழ்ந்திடும்!
தடைகளின்றியே எல்லா நிலையம் சேரும் நிலையம் வந்தால் சமர்த்தாய நிற்கும் புறப்படும் போது பேரொலியை எழுப்பும்!
பச்சை கொடியை காட்டினால் பாம்பைப் போலே நெளிந் தோடிடும் பாமரர் எல்லாம் பெரிதும் விரும்புவர் பேதமின்றியே அனைவரிடமும் பழகும்!
பரிசோதகர் வந்தால் சிட்டாய் மறைவர் -சிலர் படியில் நின்று வித்தையும் காட்டுவர் தாகம் தீர்க்க தண்ணீர் விற்பர் -சிலர் நொறுக்கத் தீனியும் விற்பர் -சிலர் தினம் படிக்கும் நாளேடும் விற்பர் தென்றல் காற்றில் தூங்கவும் செய்வர்-சிலர் தூங்கியவரின் பையில்கை வரிசையும் காட்டுவர் திருடனென்றால் சங்கிலியும் இழுத்திடுவர் திருடனும் லாவகமாய் குதித்தும் ஒடிடுவர் -சிலர் தோல்வி யென்றால் அதற்கு யிரையும் விலையாய் கொடுத்திடுவர்!
குடும்பமாய் பலரது வாழ்வில் விளங்கும் வெளியில் பார்த்தால் பெட்டிகளாய் தெரியும் உள்ளே பார்த்தால் புகுஉலகம் தெரியும் அதற்கும் கொள்கை யுண்டு; மனிதரின் வாழ்வில் பொதுவுடமையை புகட்டும் ரயில்தான் அது! -இல.பிரகாசம் |
||||||||
by Swathi on 21 Mar 2016 1 Comments | ||||||||
Tags: Thodar Vandi Train Rayil ரயில் தொடர்வண்டி | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|