தேவையானவை :
1. இட்லி - 6 (துண்டுகளாக்கியது)
2. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
3. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
4. தக்காளி - 2 (அரைத்தது)
5. பச்சை பட்டாணி - 1/4 கப்
6. குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
7. மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
8. மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
9. கரம் மசாலா - 2 டீஸ்பூன்
10. நறுக்கிய கொத்தமல்லி - சிறிது
11. எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
12. உப்பு - தேவையான அளவு
13. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தாளிப்பதற்கு :
1. எண்ணெய் - 2 டீஸ்பூன்
2. சோம்பு பொடி - 1 டீஸ்பூன்
3. கறிவேப்பிலை - சிறிது
4. பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை :
1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துண்டுகளாக்கிய இட்லிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2. தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்க வேண்டும். பின்பு வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்த தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும்.
3. அதற்குள் பட்டாணியை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, இரண்டு விசில் விட்டு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பிறகு வேக வைத்த பட்டாணி மற்றும் குடைமிளகாயை வாணலியில் போட்டு கிளறி, பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
4. இறுதியில் பொரித்து வைத்துள்ள இட்லியை வாணலியில் போட்டு நன்கு கிளறி இறக்கி, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறினால், சூடான, சுவையான சரவண பவன் கைமா இட்லி ரெடி!!!
|