|
||||||||
தேவைதானா ஃபேஷன் ஷோ? |
||||||||
“வெளிநாடுகளைப் போல, இந்தியப் பெருநகரங்களில் ஃபேஷன் ஷோக்கள் பெருகி வருகின்றன. இந்த நடைமுறை நம் நாட்டிற்குத் தேவைதானா?”, “என் எதிர்காலம் அறிவது எப்படி?”, “ஒரு குருவின் கடமை என்ன?” என்ற வெவ்வேறு விதமான கேள்விகளுக்கு சத்குரு தரும் பதில் இங்கே…
ஃபேஷன் ஷோ நமது கலாச்சாரத்திற்கு வேண்டுமா?”
சத்குரு:
ஃபேஷன் ஷோ தேவைதானா என்பது கேள்வி இல்லை. ஃபேஷன் ஷோ தேவைதான். ஆனால் இப்படியல்ல. மேற்கத்திய நாடுகளில் நிகழும் வண்ணமே நாமும் அதை இங்கு நிகழ்த்த வேண்டும் என்பது முட்டாள்தனம். நம் கலாச்சாரத்திற்கு ஒத்துவருவது போல் நாம் வித்தியாசமாக செய்து கொள்ளலாம்.
அன்னியர்கள் இங்கு கால் வைப்பதற்கு முன்னால் நம் வீதிகளே ஃபேஷன் ஷோவாகத்தான் இருந்தது. இந்தியாவில் இருந்தது போல் விதவிதமான வண்ணமயமான ஆடை ரகங்கள் உலகில் வேறெங்கும் கிடையாது. இன்றும் கூட, மிக நுணுக்கமாக தயாரிக்கப்படும் ஆடை ரகங்கள் நம் நாட்டில் இருக்கிறது. வியாபார ரீதியாக விருத்தி செய்யாததாலும், மேற்கத்திய உடைகளை அச்சுப்பிசகாமல் பின்தொடர முற்பட்டதாலும், நமது நெசவுத் தொழிலும், ஆடை அலங்கார வேலைப்பாடுகளும் இன்று பெரும்பாலும் அழிந்துவிட்டன. அவற்றை மீண்டும் புதுப்பித்தாலே, நமது பொருளாதார நிலையை அது முற்றிலுமாக மாற்றியமைத்து விடும். அந்த அளவிற்கு ஆடை ரகங்கள் இந்தியாவை அலங்கரித்து வந்தன.
எனவே நமது தேவைக்கேற்றபடி ஃபேஷன்ஷோ செய்து கொள்வதில் தவறில்லை என நினைக்கிறேன். ஆனால் வெளிநாட்டில் நடப்பது போன்ற ஃபேஷன்ஷோ கட்டாயமாக நமக்குத் தேவையில்லை.
“வெளிநாடுகளைப் போல, இந்தியப் பெருநகரங்களில் ஃபேஷன் ஷோக்கள் பெருகி வருகின்றன. இந்த நடைமுறை நம் நாட்டிற்குத் தேவைதானா?”, “என் எதிர்காலம் அறிவது எப்படி?”, “ஒரு குருவின் கடமை என்ன?” என்ற வெவ்வேறு விதமான கேள்விகளுக்கு சத்குரு தரும் பதில் இங்கே… ஃபேஷன் ஷோ நமது கலாச்சாரத்திற்கு வேண்டுமா?” சத்குரு: ஃபேஷன் ஷோ தேவைதானா என்பது கேள்வி இல்லை. ஃபேஷன் ஷோ தேவைதான். ஆனால் இப்படியல்ல. மேற்கத்திய நாடுகளில் நிகழும் வண்ணமே நாமும் அதை இங்கு நிகழ்த்த வேண்டும் என்பது முட்டாள்தனம். நம் கலாச்சாரத்திற்கு ஒத்துவருவது போல் நாம் வித்தியாசமாக செய்து கொள்ளலாம். அன்னியர்கள் இங்கு கால் வைப்பதற்கு முன்னால் நம் வீதிகளே ஃபேஷன் ஷோவாகத்தான் இருந்தது. இந்தியாவில் இருந்தது போல் விதவிதமான வண்ணமயமான ஆடை ரகங்கள் உலகில் வேறெங்கும் கிடையாது. இன்றும் கூட, மிக நுணுக்கமாக தயாரிக்கப்படும் ஆடை ரகங்கள் நம் நாட்டில் இருக்கிறது. வியாபார ரீதியாக விருத்தி செய்யாததாலும், மேற்கத்திய உடைகளை அச்சுப்பிசகாமல் பின்தொடர முற்பட்டதாலும், நமது நெசவுத் தொழிலும், ஆடை அலங்கார வேலைப்பாடுகளும் இன்று பெரும்பாலும் அழிந்துவிட்டன. அவற்றை மீண்டும் புதுப்பித்தாலே, நமது பொருளாதார நிலையை அது முற்றிலுமாக மாற்றியமைத்து விடும். அந்த அளவிற்கு ஆடை ரகங்கள் இந்தியாவை அலங்கரித்து வந்தன. எனவே நமது தேவைக்கேற்றபடி ஃபேஷன்ஷோ செய்து கொள்வதில் தவறில்லை என நினைக்கிறேன். ஆனால் வெளிநாட்டில் நடப்பது போன்ற ஃபேஷன்ஷோ கட்டாயமாக நமக்குத் தேவையில்லை. |
||||||||
by Swathi on 24 Mar 2014 0 Comments | ||||||||
Tags: fashion show thevaithana thevaithana fashion show பேஷன் தேவைதானா தேவைதானா பேஷன் | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|