|
|||||
விளக்கேற்ற உகந்த நேரம் எது ? விளக்கேற்றும் முன், விளக்கேற்றிய பின் செய்யக்கூடாதவை எவை ? |
|||||
விளக்கேற்ற உகந்த நேரம் :
அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் விளக்கேற்றினால் வீட்டில் சர்வ மங்கள யோகம் தங்கும். மாலை 6 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும்.
விளக்கேற்றும் முன் செய்ய வேண்டியவை :
அதிகாலையில் விளக்கேற்றும்போது உடல், மனம் சுத்தத்துடன், வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கேற்றும்போது, வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும். காலை, மாலை விளக்கேற்றும்போது கொல்லைப்புறக் கதவைச் சாத்திடவேண்டும். கொலைப்புறக்கதவு இல்லாதவர்கள் பின் பக்கம் உள்ள ஜன்னல் கதவைச் சாத்திய பிறகே விளக்கேற்ற வேண்டும். விளக்கேற்றும்போது, விளக்கிற்கு பால், கற்கண்டு, நிவேதனம் வைத்து வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிட்டும் என்பது பெரியவர்களின் நம்பிக்கை.
விளக்கேற்றிய பிறகு செய்யக்கூடாதவை :
விளக்கேற்றிய பிறகு வீட்டில் யாரும் தலை சீவக்கூடாது. வீட்டைப் பெருக்கிக் கூட்டக்கூடாது.
சுமங்கலிப் பெண் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது.
விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது. விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது. விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது.
விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவற்றைக் கொடுக்கக்கூடாது. |
|||||
by Swathi on 05 Aug 2013 8 Comments | |||||
Tags: Vilakku Neram Sirantha Neram விளக்கு சிறந்த நேரம் நேரம் உகந்த நேரம் | |||||
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|