குளிர்காலம் துவங்கியதால் கேதார்நாத் கோயிலின் நடை அடைக்கப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம், கேதர்நாத்தில் கேதர்நாத் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஏப்ரல் முதல் நவம்பர் தொடக்கம் வரை வழிபாடு நடத்தப்படும்.
பின்னர் குளிர்காலத்தில் கோயில் நடை சாத்தப்படும். அப்போது, சிவன் சிலை உகிமாத் நகரில் உள்ள ஓம்கரேஷ்வரர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு வழிபாடு செய்யப்படும்.
இந்த நிலையில், குளிர்காலம் தொடங்கியதை தொடர்ந்து கேதார்நாத் சிவன் கோயிலின் நடை சாத்தப்பட்டது. இதையொட்டி காலை 4 மணியளவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 4 மணி நேரம் நடந்த பூஜையை தொடர்ந்து 8.30 மணிக்கு நடை சாத்தப்பட்டது. பல்லக்கில் எடுத்து செல்லப்படும் சிவன் சிலை உகிமாத்தில் உள்ள ஓம்கரேஷ்வரர் கோயிலை சென்றடையும்.
|