|
||||||
ஆரோக்கியமான வாழ்வு வேண்டுமா !! உணவை மண் பானையில் சமையுங்கள் !! |
||||||
பண்டைய காலங்களில் வீடுகளில் மண் பானையில் குடிநீர் இருக்கும். மண் பானையில்தான் சமையல் நடக்கும். காலப்போக்கில் இவை கிராமப் புறங்களில் கூட காணாமல் போனது. ஆனாலும் இன்றளவும் கூட, மண் பானை சமையலை விரும்புபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு காரணம் இதில் சமைத்த உணவின் ருசியும்,ஆரோக்கியமும் தான். வருடம் தோறும் வரும் பொங்கல் பண்டிகை, மக்களுடன் மண் பானை தொடர்பை ஏற்படுத்தி, பாரம்பரியத்தை காக்க செய்கிறது. தமிழரின் பாரம்பரிய சமையல் பாத்திரமாகா விளங்கும் மண் பானையில் சமைப்பதால் கிடைக்கும் பயன்கள் குறித்து இங்கு காண்போம். மண் பானை சமையலில் என்னதான் இருக்கு : மண்பானைகள் பல நூற்றாண்டுகளாக ஆரோக்கிய சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது. மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது. இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது. மண் பானைகள் சமைக்கும் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை. ஆனால், உலோக பாத்திரங்களோ, உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும் போது உணவுடன் வினைபுரியும் தன்மை கொண்டது. மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை. |
||||||
by Swathi on 10 May 2014 2 Comments | ||||||
Tags: Pot Cooking Pot Samayal Man Paanai Samayal மண் பானை மண் பானை சமையல் | ||||||
Disclaimer: |
||||||
|
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|