மூங்கில் கம்புகளுக்கிடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து வித்தை காட்டும் கலை கழைக்கூத்து எனப்படும். மூங்கிலைக் குறிக்கும் கழை என்ற சொல்லுடன் கூத்தும் இணைந்து கழைக்கூத்து ஆனது. இது முக்கியமாக விருதுநகர் மாவட்டம், அத்திக்குளம், கோவில்பட்டி, தேவதானம், புதுப்பட்டி, கமுது, காலியாப்பட்டி போன்ற ஊர்களில் பெருமளவு நிகழ்ந்திருக்கிறது. இந்நிகழ்ச்சியானது காலை 8 மணி முதல 11 மணி வரையிலோ அல்லது 3 மணி முதல் 6 மணி வரையிலோ சூரிய வெளிச்சத்திலேயே நடத்தப்பட வேண்டும் என்பது நியதி. இரவு நேரத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்படாது. பெண்களே கயிற்றில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்குகொள்வர். இக்கலையானது இப்போது பெருமளவாக வழக்கில் இல்லை. இக்கலைஞர்கள் தற்போது சரியான ஆதரவு இல்லாத காரணத்தால் வேறு தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
|